search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மாவு மில் அதிபர்"

    • அவரது 2 விரல்கள் துண்டிக்கப்பட்டு அவதிப்பட்டு வந்தார்.
    • உடலில் தீ பற்ற பற்ற வலி தாங்க முடியாமல் அவர் அலறி உள்ளார்

    கன்னியாகுமரி :

    களியக்காவிளை அருகே உள்ள ஈத்தவிளை பகுதியை சேர்ந்தவர் பால்ராஜ். இவர் அதே பகுதியில் சொந்தமாக மாவு மில் நடத்தி வருகிறார்.

    கடந்த சில ஆண்டுகளாக பால்ராஜ் நோயினால் அவதிப்பட்டு வந்தார். அவரது 2 விரல்கள் துண்டிக்கப்பட்டு அவதிப்பட்டு வந்தார். இதனால் பால்ராஜ், சில தினங்களாக மனமுடைந்த நிலையில் காணப்பட்டார்.

    நேற்று இரவு வீட்டில் எல்லாரும் தூங்கிக்கொண்டு இருந்தனர். அப்போது பால்ராஜ், தனது உடலில் மண்எண்ணையை ஊற்றி தீ வைத்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். உடலில் தீ பற்ற பற்ற வலி தாங்க முடியாமல் அவர் அலறி உள்ளார். அதனை கேட்டு குடும்பத்தினர் ஓடிவந்தனர்.

    தீயில் உடல் கருகிய பால்ராஜை மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவ மனையில் சேர்த்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக திருவனந்தபுரம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி பால்ராஜ் இன்று காலை பரிதாபமாக இறந்தார். இது குறித்து களியக்கா விளை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத் திற்கு சென்று தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மில் உரிமையாளர் தீ குளித்து இறந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பர பரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    ×