search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மாலை அணிவித்தல்"

    • அண்ணா சிலைக்கு அ.தி.மு.க.வின் புதிய நிர்வாகிகள் மாலை அணிவிக்கும் நிகழ்ச்சி நடந்தது.
    • வருகிற சட்டசபை தேர்தலில் தஞ்சை, ஒரத்தநாடு ஆகிய 2 தொகுதிகளையும் அ.தி.மு.க. கைப்பற்றும்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மத்திய மாவட்ட அ.தி.மு.க.வின் புதிய நிர்வாகிகள் தஞ்சை பழைய பஸ் நிலையம் அருகே உள்ள அண்ணா சிலைக்கு மாலை அணிவிக்கும் நிகழ்ச்சி நடந்தது.

    இதற்கு முன்னாள் அமைச்சரும், அமைப்பு செயலாளருமான காமராஜ் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். மத்திய மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் மா.சேகர் முன்னிலை வகித்தார். மாநகர செயலாளர் சரவணன் வரவேற்றார்.

    பின்னர் புதிய நிர்வாகிகள் அனைவரும் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

    பின்னர் அங்கிருந்து அனைவரும் ஊர்வலமாக புறப்பட்டு தஞ்சை ரெயிலடிக்கு வந்தனர். தொடர்ந்து ரெயிலடியில் உள்ள எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா சிலைக்கு புதிய நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். தொடர்ந்து புதிய நிர்வாகிகள் பேசினர்.

    இதையடுத்து முன்னாள் அமைச்சர் காமராஜர் பேசியதாவது:-

    தஞ்சை, ஒரத்தநாடு ஆகிய சட்டசபை தொகுதிகளை உள்ளடக்கியது தான் மத்திய மாவட்டமாகும். புதிய நிர்வாகிகள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். உங்களது செயல்பாடுகளை பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி எதிர்பார்ப்பார்.

    வருகிற சட்டசபை தேர்தலில் மத்திய மாவட்டத்தில் உள்ள தஞ்சை, ஒரத்தநாடு ஆகிய 2 தொகுதிகளையும் அ.தி.மு.க. கைப்பற்றும். நாடாளுமன்ற தேர்தலில் அதிக வாக்குகளை பெற்று தருவோம். தி.மு.க.வை எதிர்த்து தொடங்கப்பட்டது அ.தி.மு.க.

    இது சாதாரண மக்களுக்கான இயக்கம். 51 ஆண்டுகளை கடந்தும் நிமிர்ந்து நிற்கிறது.

    மக்களால் ஏற்று கொண்ட இயக்கம். தமிழகத்தில் மக்கள் விரோத ஆட்சி நடக்கிறது. என்றைக்கு அ.தி.மு.க. ஆட்சிக்கு வரும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர். வரும் சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க. வெற்றி பெறும். எடப்பாடி பழனிசாமி முதல்-அமைச்சராக அமருவார். இன்றைக்கு தமிழகத்தை ஆளும் தி.மு.க. அரசு காவிரி நீரை பெற்று தரவிலை. காவிரியில் நமக்கான உரிமையை பெற்று தராத அரசாக உள்ளது. இதை கண்டித்து வருகிற 6-ந் தேதி தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, கடலூர் ஆகிய மாவட்டங்களில் அ.தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். தஞ்சையில் நடக்கும் ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் கலந்து கொள்வார்.

    இந்த ஆர்ப்பாட்டம் வெற்றி அடைய முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.

    ×