என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » மாமல்லபுரம் சுற்றுலா தலம்
நீங்கள் தேடியது "மாமல்லபுரம் சுற்றுலா தலம்"
மாமல்லபுரம் சுற்றுலா தலத்தில் கேபிள் பதிக்கும் பணி தொடங்கிய நிலையில் 6 மாதத்தில் தடையில்லா மின்சாரம் வழங்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மாமல்லபுரம்:
காஞ்சீபுரம் மாவட்டத்தில் உள்ள சுற்றுலா தளங்களில் அதிக வருவாய் தரக்கூடியது மாமல்லபுரம். இங்கு சிறு மழைக்கும், காற்றுக்கும் மின்சாரத்தை நிறுத்தி விடுவது வழக்கம். இரவுநேர மின்வெட்டால் கடற்கரை பகுதியில் திருட்டு பயம் உள்ளது. வெளிநாட்டு சுற்றுலா பயணிகளிடம் திருடிய சம்பவங்களும் நடந்தது
இதை உள்நாடு, வெளிநாடு சமூக ஆர்வலர்கள் பலர் பேஸ்புக், டுவிட்டர், வாட்ஸ்அப் போன்ற சமூக வலை தளங்களில் பதிவிட்டு வந்த நிலையில் மத்திய அரசு கடலோர பகுதி சுற்றுலா தளங்களை மேம்படுத்த பல கோடி ரூபாய் நிதி ஒதுக்கியது.
இதில் முதல் கட்டமாக மாமல்லபுரத்தில் உள்ள சாலை, வீதி, தெரு, என சுமார் 86 கிலோ மீட்டர் தூரத்துக்கு தரைவழி மின்சார கேபிள்கள் பதித்து மின்சார வயர் தெரியாமல் அழகான பசுமை நகரமாக மாற்றி தடையில்லா மின்சாரம் வழங்க உள்ளனர். அதற்கான முதல் கட்ட பணிகளை மின் வாரியம் துவங்கி விட்டது.
இந்த பணிக்காக விழுப்புரத்தில் இருந்து 20-க்கும் மேற்பட்ட ஒப்பந்த பணியாளர்கள் ஈடுபட்டு வருகிறார்கள். 200 மீட்டர் நீளம் கொண்ட 100-க்கும் மேற்பட்ட கேபிள் உருளைகள் மாமல்லபுரம் கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த பணிகள் முடிய 6 மாதம் ஆகும் என மின்சார வாரிய ஊழியர்கள் தெரிவித்தனர்.
பணி முடிந்து தரைவழி மின்சாரம் வழங்கப்பட்டதும் மாமல்லபுரம் சென்னை பெருநகர் போன்று காட்சியளிக்கும். #tamilnews
காஞ்சீபுரம் மாவட்டத்தில் உள்ள சுற்றுலா தளங்களில் அதிக வருவாய் தரக்கூடியது மாமல்லபுரம். இங்கு சிறு மழைக்கும், காற்றுக்கும் மின்சாரத்தை நிறுத்தி விடுவது வழக்கம். இரவுநேர மின்வெட்டால் கடற்கரை பகுதியில் திருட்டு பயம் உள்ளது. வெளிநாட்டு சுற்றுலா பயணிகளிடம் திருடிய சம்பவங்களும் நடந்தது
இதை உள்நாடு, வெளிநாடு சமூக ஆர்வலர்கள் பலர் பேஸ்புக், டுவிட்டர், வாட்ஸ்அப் போன்ற சமூக வலை தளங்களில் பதிவிட்டு வந்த நிலையில் மத்திய அரசு கடலோர பகுதி சுற்றுலா தளங்களை மேம்படுத்த பல கோடி ரூபாய் நிதி ஒதுக்கியது.
இதில் முதல் கட்டமாக மாமல்லபுரத்தில் உள்ள சாலை, வீதி, தெரு, என சுமார் 86 கிலோ மீட்டர் தூரத்துக்கு தரைவழி மின்சார கேபிள்கள் பதித்து மின்சார வயர் தெரியாமல் அழகான பசுமை நகரமாக மாற்றி தடையில்லா மின்சாரம் வழங்க உள்ளனர். அதற்கான முதல் கட்ட பணிகளை மின் வாரியம் துவங்கி விட்டது.
இந்த பணிக்காக விழுப்புரத்தில் இருந்து 20-க்கும் மேற்பட்ட ஒப்பந்த பணியாளர்கள் ஈடுபட்டு வருகிறார்கள். 200 மீட்டர் நீளம் கொண்ட 100-க்கும் மேற்பட்ட கேபிள் உருளைகள் மாமல்லபுரம் கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த பணிகள் முடிய 6 மாதம் ஆகும் என மின்சார வாரிய ஊழியர்கள் தெரிவித்தனர்.
பணி முடிந்து தரைவழி மின்சாரம் வழங்கப்பட்டதும் மாமல்லபுரம் சென்னை பெருநகர் போன்று காட்சியளிக்கும். #tamilnews
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X