search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மாணவி மிரட்டல்"

    • பெருங்குடியைச் சேர்ந்த கல்லூரி மாணவி ஒருவருடன் இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கம் ஏற்பட்டது.
    • உங்களின் காதலை அங்கீகரிக்க வேண்டும் என்றால், நீங்கள் எனக்கு லேப்டாப், பணம் கொடுக்க வேண்டும் என்று தெரிவித்தார்.

    மதுரை:

    மதுரை பெருங்குடியை சேர்ந்த ஒருவர், என் மகளின் போட்டோவை இணையத்தில் வெளியிடுவதாக ஈரோடு வாலிபர் மிரட்டுகிறார் என்று ஒத்தக்கடை போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் விசாரணை நடத்தி சம்பந்தப்பட்ட வாலிபர் மீது நடவடிக்கை எடுக்க போலீஸ் சூப்பிரண்டு சிவபிரசாத் உத்தரவிட்டார்.

    இதைத்தொடர்ந்து ஊமச்சிகுளம் டி.எஸ்.பி.பிரியதர்ஷினி மேற்பார்வையில், ஒத்தக்கடை இன்ஸ்பெக்டர் முருகேசன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. அவர்கள் இது தொடர்பாக பாதிக்கப்பட்ட இளம்பெண்ணிடம் விசாரணை நடத்தினார்கள்.

    அப்போது அந்த பெண் கணினி பட்டப்படிப்பு முடித்துவிட்டு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருவது தெரிய வந்தது. அவர் கூறும்போது, எனக்கு ஈரோடு சந்திரசேகருடன் இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கம் ஏற்பட்டது. அப்போது அவருக்கு என் போட்டோக்களை அனுப்பி வைத்தேன்.

    அதனை பார்த்த சந்திரசேகர் என்னை காதலிப்பதாக கூறினார். அதனை நான் ஏற்றுக்கொள்ளவில்லை. இதனால் ஆத்திரமடைந்த அவர், நீ என்னை காதலிக்க வேண்டும். இல்லையெனில் உன் புகைப்படங்களை மார்பிங் செய்து இணையத்தில் வெளியிடுவேன் என்று மிரட்டினார் என்று தெரிவித்தார்.

    இதைத்தொடர்ந்து தனிப்படை போலீசார் நடத்திய விசாரணையில் இளம்பெண்ணை மிரட்டிய வாலிபர் ஈரோடு மாவட்டம், சித்தோடு, செங்குந்தபுரத்தைச் சேர்ந்த சந்திரசேகர் (வயது 25) என்று தெரிய வந்தது.

    அவரை ஒத்தக்கடை போலீஸ் நிலையத்திற்கு வரவழைத்து விசாரித்தனர். அப்போது அவர் எனக்கு பெருங்குடியைச் சேர்ந்த கல்லூரி மாணவி ஒருவருடன் இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கம் ஏற்பட்டது. அப்போது அவளிடம் நான் என் காதலை தெரிவித்தேன். ஆனால் அந்த பெண், உங்களின் காதலை அங்கீகரிக்க வேண்டும் என்றால், நீங்கள் எனக்கு லேப்டாப், பணம் கொடுக்க வேண்டும் என்று தெரிவித்தார். எனவே நான் அவர் கேட்டது போல் அனைத்தையும் வாங்கி கொடுத்தேன். அதன் பிறகு அவர் எனது காதலை ஏற்றுக்கொண்டார். நாங்கள் இருவரும் இன்ஸ்டாகிராம் மூலம் நெருங்கி பழகி வந்தோம்.

    இந்த நிலையில் அவள் என்னை திடீரென நிராகரிக்க தொடங்கினார். இதுபற்றி அறிந்த நான் மதுரைக்கு நேரடியாக வந்து விசாரித்தேன். அப்போது அவளுக்கு வீட்டில் திருமண ஏற்பாடுகள் நடப்பது தெரிய வந்தது. எனவே நான் அவரது வீட்டுக்கு சென்று, நான் வாங்கிக் கொடுத்த பொருட்களை திருப்பி தரும்படி கேட்டேன். அதனை அவரது குடும்பத்தினர் தர மறுத்து விட்டனர். இதன் பின்னர் நான்,அந்த பெண்ணிடம் உனது போட்டோவை இணையத்தில் பரப்புவேன் என்று மிரட்டினேன் என்று தெரிவித்தார்.

    அதன்பேரில் இளம்பெண்ணுக்கு மிரட்டல் விடுத்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

    ×