search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மாணவி சத்யா"

    • மாணவி சத்யாவை எப்படியாவது திருமணம் செய்து கொள்ள ஆசைப்பட்டேன்.
    • சத்யாவுக்கு வேறு இடத்தில் திருமணம் செய்து வைப்பதற்கு பெற்றோர் ஏற்பாடு செய்தனர். இது எனக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது.

    சென்னை:

    பரங்கிமலை ரெயில் நிலையத்தில் கல்லூரி மாணவி சத்யாவை கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்ட வாலிபர் சதீசை, சி.பி.சி.ஐ.டி. போலீசார் ஒருநாள் காவலில் எடுத்து விசாரணை நடத்தினர்.

    அப்போது சதீசை, சி.பி.சி.ஐ.டி. போலீசார் பரங்கி மலை ரெயில் நிலையம் மற்றும் அவனது வீட்டுக்கு அழைத்துச் சென்றனர். சத்யாவை கொலை செய்தது ஏன்? என்பது குறித்து சதீஷ் ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளான். அதில் கூறியிருப்பதாவது:-

    மாணவி சத்யாவை எப்படியாவது திருமணம் செய்து கொள்ள ஆசைப்பட்டேன். ஆனால் அது நடக்கவில்லை. அதே நேரத்தில் சத்யாவுக்கு வேறு இடத்தில் திருமணம் செய்து வைப்பதற்கு பெற்றோர் ஏற்பாடு செய்தனர். இது எனக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது.

    இதையடுத்து சத்யாவை கொலை செய்ய முடிவு செய்தேன். அதற்காக திட்டம் தீட்டி பரங்கிமலை ரெயில் நிலையத்தில் வைத்து ரெயிலில் தள்ளி கொலை செய்ய முடிவு செய்து திட்டம் போட்டு தீர்த்துக் கட்டினேன்.

    இவ்வாறு சதீஷ் வாக்குமூலம் அளித்திருப்பதாக போலீசார் தெரிவித்தனர்.

    ஒருநாள் காவல் முடிந்து சதீசை நேற்று போலீசார் சைதாப்பேட்டை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    ×