search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மாணவி சத்தியா கொலை"

    • மாணவியின் தாய் ராமலட்சுமி புற்றுநோயால் அவதிப்பட்டு வரும் நிலையில் கணவர் மாணிக்கம் தற்கொலை செய்து கொண்டதும் அவர்களது குடும்பத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
    • மாணவி சத்தியபிரியா கொலை செய்யப்பட்ட அன்று சென்னை மாநகர போலீஸ் அதிகாரிகளும் நேரில் சென்று ஆறுதல் கூறியபோது அவர் கண்ணீர் விட்டு அழுதார்.

    ஆலந்தூர்:

    சென்னை ஆலந்தூரைச் சேர்ந்த கல்லூரி மாணவி சத்திய பிரியாவை, பரங்கிமலை ரெயில் நிலையத்தில் வைத்து வாலிபர் சதீஷ் ரெயில் முன்பு தள்ளி கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    இது தொடர்பாக மாம்பலம் ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திய நிலையில் வழக்கு விசாரணை சி.பி.சி.ஐ.டி. போலீசுக்கு மாற்றப்பட்டது. மாணவி சத்திய பிரியா கொலை வழக்கை விரைந்து முடித்து கொலையாளி சதீசுக்கு அதிகபட்ச தண்டனையை பெற்றுக்கொடுக்க வேண்டும் என்பதற்காகவே இந்த வழக்கு விசாரணை சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றப்பட்டுள்ளது.

    இதையடுத்து சி.பி.சி.ஐ.டி. போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டு உள்ளனர். ரெயில்வே போலீசாரிடமிருந்து வழக்கு தொடர்பான ஆவணங்கள் அனைத்தையும் வாங்கி தங்களது அதிரடி விசாரணையை வேகப்படுத்தி உள்ளனர்.

    பரங்கிமலை ரெயில் நிலையத்துக்கு நேரில் சென்று விசாரணை நடத்திய போலீசார் கேமரா காட்சிகளை போட்டு பார்த்தும் பல்வேறு தகவல்களை சேகரித்தனர். மாணவி சத்திய பிரியா, கொலையாளி சதீஷ் இருவரும் தனித்தனியாக பரங்கிமலை ரெயில் நிலையத்துக்குள் நுழையும் காட்சி, சத்திய பிரியாவை, சதீஷ் ரெயிலில் தள்ளி விடும் வீடியோ பதிவு ஆகியவற்றையும் சி.பி.சி.ஐ.டி. போலீசார் கைப்பற்றி இருக்கிறார்கள்.

    மாணவியின் தாய் ராமலட்சுமி புற்றுநோயால் அவதிப்பட்டு வரும் நிலையில் கணவர் மாணிக்கம் தற்கொலை செய்து கொண்டதும் அவர்களது குடும்பத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    மாணவி சத்தியபிரியா கொலை செய்யப்பட்ட அன்று சென்னை மாநகர போலீஸ் அதிகாரிகளும் நேரில் சென்று ஆறுதல் கூறியபோது அவர் கண்ணீர் விட்டு அழுதார்.

    இந்த நிலையில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் மாணவி சத்திய பிரியாவின் தாயிடம் நேரில் விசாரணை நடத்தினார்கள். ஒரே நேரத்தில் மகள், கணவரை இழந்து அவர் சோகத்தில் மூழ்கி இருந்தார். அவரிடம் சி.பி.சி.ஐ.டி. போலீசார் நடந்த சம்பவத்தை கேட்டனர். சத்திய பிரியா-சதீஷ் இடையே ஏற்பட்ட காதல் விவகாரம் குறித்த விவரங்களை வாக்குமூலமாக பதிவு செய்தனர்.

    சி.பி.சி.ஐ.டி. போலீசாரிடம் சதீஷ் குடும்பத்தை எவ்வளவு நாட்களாக தெரியும், சத்தியபிரியா-சதீஷ் இடையே என்ன நடந்தது என்று போலீசார் விளக்கமாக ராமலட்சுமியிடம் கேட்டனர்.

    அப்போது அவர் போலீசாரிடம் கூறியதாவது:-

    சிறு வயதில் இருந்தே அடுத்தடுத்த தெருக்களில் 2 குடும்பமும் வசித்து வந்தோம். சத்தியபிரியா பெரியவளாகிய பிறகும் சதீஷ் அவளை பின் தொடர்ந்துள்ளான். அவள் வெளியில் செல்லும் போது பின் தொடர்வதாக என் மகள் என்னிடம் கூறுவாள்.

    பின்னர் என் மகளை அவன் காதலிப்பதகாக கூறியதையும் என்னிடம் தெரிவித்தாள். நாங்கள் உடனே கண்டித்தோம். அவனது பெற்றோரிடம் சொல்லி இது போன்ற செயலில் ஈடுபடுவதை தடுக்க வேண்டும் என்று கூறினோம்.

    ஒருமுறை மாம்பலம் ரெயில் நிலையத்தில் சதீஷ், சத்தியபிரியாவிடம் வாய் தகராறு செய்து அடித்து உள்ளான். அந்த சம்பவத்தையும் அவள் கூறினாள். இது பற்றி போலீசில் தெரிவித்தோம்.

    போலீசார் அவனிடம் விசாரணை என்ற பெயரில் எச்சரிக்கை செய்து விட்டு விட்டனர். அன்றே போலீசார் அவன் மீது நடவடிக்கை எடுத்து இருந்தால் என் மகளை இன்று பறிகொடுத்து இருக்க மாட்டேனே.

    என் மகளை ரெயிலில் தள்ளி கொடூரமாக கொலை செய்த அவனுக்கு உரிய தண்டனை பெற்று தர வேண்டும் என்று கண்ணீர் மல்க ராமலட்சுமி வாக்குமூலமாக கூறியுள்ளார்.

    அதனைத் தொடர்ந்து சி.பி.சி.ஐ.டி. போலீசார் அடுத்தகட்ட விசாரணைக்கு சென்றனர்.

    ×