search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மாணவர்கள் பங்கேற்பு"

    • மாநில அளவிலான போட்டி கள் நடத்தி பரிசுக ளும் சான்றிதழ்களும் வழங்கி ஊக்கப்படுத்த உத்தரவி ட்டுள்ளார்.
    • காசோலைகள் மற்றும் பாராட்டு சான்றிதழ் வழ ங்கப்பட்டது.

    கள்ளக்குறிச்சி:

    தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழகத்தை விளையாட்டு துறைகளில் முதன்மை மாநிலமாக கொண்டு வருத ற்கான தொடர் நடவடி க்கைகளை மேற்கொண்டு வருகிறார். அதன்படி தமிழகம் முழுவதும் மாவட்ட அளவிலான முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டி என்ற விளையாட்டு போட்டிகளை நடத்தி, இதன் மூலம் வெற்றி பெறுவோர்களுக்கு மாநில அளவிலான போட்டி கள் நடத்தி பரிசுக ளும் சான்றிதழ்களும் வழங்கி ஊக்கப்படுத்த உத்தரவி ட்டுள்ளார்.

    இந்த போட்டிகள் மாற்றுத்திறனாளிகளு க்கான பிரிவு, அரசு ஊழியர்களுக்கான பிரிவு, பொதுமக்களுக்கான பிரிவு, பள்ளி மாணவர்களுக்கான பிரிவு, கல்லூரி மாணவர்க ளுக்கான பிரிவு என 5 பிரிவின்கீழ் போட்டிகள் நடத்தப்பட்டன. போட்டி களில் வெற்றி பெற்று முதல் 3 இடங்களை பிடித்தவர்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழ் வழங்க ப்பட்டது.

    இதேபோல் கள்ளக்குறி ச்சி மாவட்டத்தில் முதல மைச்சர் கோப்பை போட்டிகளில் பள்ளி மாணவர்கள் பிரிவில் 534 மாணவர்களும், கல்லூரி மாணவர்கள் பிரிவில் 174 மாணவர்களும், பொது பிரிவில் 227 நபர்களும், அரசு ஊழியர்கள் பிரி வில் 182 நபர்களும், மாற்றுத்திறனாளிகள் பிரிவில் 70 நபர்களும் என மொத்தம் 1,187 நபர்கள் முதல் 3 இடங்களை பிடித்தனர். இவர்களுக்கு பரிசுகளும், சான்றிதழ்களும் வழங்கப்பட்டது. இதில் முதல் பரிசு 406 நபர்க ளுக்கு ரூ 3,000 வீதம் ரூ.12,18,000, 2-ம் பரிசு 403 நபர்களுக்கு ரூ 2,000 வீதம் ரூ. 8,06,000, 3-ம் பரிசு 378 நபர்களுக்கு ரூ.1,000 வீதம் ரூ. 3,78,000 என மொத்தம் 1,187 நபர்களுக்கு ரூ. 24,02,000-த்திற்கான காசோலைகள் மற்றும் பாராட்டு சான்றிதழ் வழ ங்கப்பட்டது. இதனால் 1,187 நபர்கள் பயனடை ந்துள்ளனர்.

    மேலும், கள்ளக்குறிச்சி மாவட்டதிலிருந்து மாநில அளவிலான முதலமைச்சர் கோப்பை போட்டிக்கு பள்ளி மாணவர்கள் பிரிவில் 193 மாணவ மாணவியர்களும், கல்லூரி மாணவர்கள் பிரிவில் 63 மாணவ மாணவியர்களும், பொதுமக்கள் பிரிவில் 80 நபர்களும், அரசு ஊழியர்கள் பிரிவில் 62 நபர்களும், மாற்றுத்திறனாளி பிரிவில் 39 நபர்களும் என மொத்தம் 437 நபர்கள் பங்கேற்க உள்ளனர். இப்போட்டிகளில் வெற்றி பெற்று மாநில அளவி லான போட்டியில் பங்கேற்றுள்ள மாணவ, மாணவிகள் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டா லினுக்கு நன்றியை தெரிவி த்துள்ளனர். இவ்வாறு மாவட்ட கலெ க்டர் ஷ்ரவன் குமார் தெரிவித்துள்ளார்.

    ×