search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மாஞ்சோலை எஸ்டேட்"

    • மாஞ்சோலை எஸ்டேட் நோக்கி நகர்கிறது
    • யானை கூட்டத்துடன் சேர்ந்து சுற்றித்திரிகிறது

    நாகர்கோவில் :

    தேனி மாவட்டம் பகுதியில் பொதுமக்களை அச்சுறுத்தி வந்த அரிசி கொம்பன் யானையை கடந்த ஜூன் மாதம் 5-ந்தேதி வனத்துறையினர் மயக்க ஊசி செலுத்தி பிடித்தனர்.

    பிடிபட்ட யானையை நெல்லை, குமரி மாவட்ட எல்லை பகுதியான முத்துகுளிவயல் பகுதியில் விட்டனர். விடப்பட்ட அரிசிகொம்பன் யானையின் கழுத்தில் ரேடியோ காலர் கருவி பொருத்தப்பட்டு யானையை தினமும் கண்காணித்து வந்தனர். யானையை விடப்பட்ட நாள் முதல் ஒரு மாத காலத்திற்கு அதே இடத்திலேயே வசித்து வந்தது.

    இந்த நிலையில் அரிசி கொம்பன் யானை மெலிந்து காணப்பட்டதாக சமூக வலைதளங்களில் வீடியோ பரவியது. பின்னர் கடந்த சில நாட்களுக்கு முன்பு யானை அந்த பகுதியில் உள்ள யானை கூட்டத்துடன் சேர்ந்து உலா வருவது போன்ற காட்சிகளும் வெளியானது. இருப்பினும் வனத்துறையினர் யானையை தொடர்ந்து கண்காணித்து வந்தனர்.

    அரிசி கொம்பன் யானை விடப்பட்ட நாள் முதல் தினமும் ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்கு நடக்காமல் காணப்பட்டது. ஆனால் கடந்த 2 வாரங்களாக யானை தினமும் ஓய்வின்றி 10 கிலோ மீட்டர் தூரம் சுற்றி திரிகிறது. மேலும் அந்த பகுதியில் உள்ள யானை கூட்டத்துடன் சேர்ந்து அரிசி கொம்பன் யானை சுற்றி திரிவது தெரியவந்துள்ளது.

    இந்த நிலையில் அரிசி கொம்பன் யானை விடப்பட்ட பகுதியில் இருந்து நாலுமூக்கு பகுதிக்கு வந்துள்ளது. அந்த பகுதியில் உள்ள வாழைகளை சேதப்படுத்தியதாகவும் கூறப்படுகிறது.

    இதையடுத்து வனத்துறையினர் அங்கேயே முகாமிட்டு கண்காணிப்பு பணியை மேற்கொண்டு வருகிறார்கள். தற்பொழுது அரிசி கொம்பன் யானை அம்பாசமுத்திரம் அருகே மாஞ்சோலை எஸ்டேட்டை நோக்கி நகர்ந்து வருவதா கவும் தகவல் வெளியாகி உள்ளது.

    மாஞ்சோலை எஸ்டேட் பகுதியில் ஏராளமான தொழிலா ளர்கள் தங்கி உள்ளனர். அரிசி கொம்பன் யானை தற்போது அங்கு நகர்ந்து வருவதால் அவர்கள் அச்சத்தில் உள்ளனர்.

    இதுகுறித்து குமரி மாவட்ட வனஅதிகாரி இளையராஜா கூறுகையில், அரிசி கொம்பன் யானை விடப்பட்ட இடத்தில் தான் கடந்த சில மாதங்களாக சுற்றி திரிந்தது. முதலில் தினமும் ஒரு கிலோ மீட்டர் தூரம் மட்டுமே நடந்த யானை தற்போது 14 கிலோமீட்டர் தூரம் வரை தினமும் நடக்கிறது.

    அந்த பகுதியில் உள்ள யானை கூட்டத்துடன் சேர்ந்து அது உலா வருகிறது. யானையை தினமும் வனத்துறையினர் கண் காணித்து வருகிறார்கள் என்றார்.

    ×