search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மலைப்பாம்பு பிடிபட்டது"

    • பொதுமக்கள் பிடித்தனர்
    • வனத்துறையினர் காட்டுப் பகுதியில் விட்டனர்

    வாணியம்பாடி:

    வாணியம்பாடி அடுத்த அம்பலூர் பாலாற்றங்கரை ஓரத் தில் நேற்று மாலை மலைப்பாம்பு ஒன்று பதுங்கி இருப்பதை அந்தப்பகுதி வழியாக சென்ற பொது மக்கள் பார்த்தனர்.

    அவர்கள் உடனடியாக தீயணைப்பு மற்றும் வனத்துறை யினருக்கு தகவல் அளித்தனர்.

    அவர்கள் வருவதற்குள் பொதுமக்களே மலைப்பாம்பை பிடித்தனர். பிடிபட்ட மலைப்பாம்பு 10 அடி நீளம் இருந்தது. அதனை பொதுமக்கள் வனத்துறையினர் வந்ததும் அவர்களிடம் ஒப்படைத்தனர். அதனை வனத்துறையினர் காட்டுப் பகுதியில் கொண்டுபோய் விட்டனர்.

    • தேயிலை தோட்டத்தில் மலைப்பாம்பு ஒன்று படுத்து கிடந்தது
    • 10 அடி நீளமுள்ள மலைப்பாம்பை லாவகமாக பிடித்து மீட்டனர்.

    அரவேணு,

    கோத்தகிரி கட்டபெட்டு வனச்சரகத்திற்கு உட்பட்ட பிக்காபதி பிரிவு, பெரகனி நெடுகுளா கிராமத்தில் குடியிருப்புகளை ஒட்டி உள்ள தேயிலை தோட்டத்தில் மலைப்பாம்பு ஒன்று படுத்து கிடந்தது. இதை பார்த்து அதிர்ச்சியான தொழிலாளர்கள் உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.

    தகவல் அறிந்ததும் வனசரகர் செல்வகுமார் உத்தரவின் பேரில் வனக்காப்பாளர் குட்டன், வன காவலர் ராஜேஷ் உள்ளிட்ட வனத்துறையினர் விரைந்து வந்து தேயிலை தோட்டத்தில் படுத்து கிடந்த 10 அடி நீளமுள்ள மலைப்பாம்பை லாவகமாக பிடித்து மீட்டனர். பின்னர் அடர்ந்த வனப்பகுதியில் கொண்டு சென்று பாதுகாப்பாக விட்டனர்.

    ×