search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மர்மநோய்"

    • தமிழக அரசு மர்ம நோயால் பாதிக்கப்பட்ட சிறுவனின் மருத்துவ சிகிச்சைக்கு உதவ வேண்டும்.
    • நோய்க்கான காரணம் குறித்தும் தெளிவுபடுத்த வேண்டும் என பெற்றோர் மற்றும் உறவினர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

    செம்பட்டி:

    திண்டுக்கல் மாவட்டம், செம்பட்டியை அடுத்த எஸ்.பாறைப்பட்டியைச் சேர்ந்தவர் மாரிமுத்து. இவரது மனைவி கஸ்தூரி. இவர்களுக்கு முகேஷ் (வயது 10). ஹரீஷ் (7) என்ற 2 மகன்கள் உள்ளனர். முகேஷ் அதே பகுதியில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் 5-ம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில், முகேசுக்கு லட்சத்தில் ஒருவருக்கு மட்டுமே வரக்கூடிய "வில்சன் காப்பர்" என்ற மர்ம நோயால் பாதிக்கப்பட்டு கல்லீரல் முழுமையாக செயல் இழந்தது.

    இதனையடுத்து, மதுரையில் அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். அப்போது மேலும் அவருக்கு துணை நோய்கள் ஏற்பட்டு பாதிக்கப்பட்டார். உடனடியாக கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்தால் மட்டுமே காப்பாற்ற முடியும் என டாக்டர்கள் கூறியதால், அமைச்சர் இ.பெரியசாமியின் பரிந்துரையின்பேரில், சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேரடியாக, சிறுவனின் குடும்பத்தினரை அழைத்து பேசி நோய் விவரங்களை கேட்டறிந்தார்.

    பின்னர் சிறுவனை சென்னை ஸ்டான்லி பல்நோக்கு மருத்துவமனையில் அனுமதித்து சிறப்பு சிகிச்சையளித்து வந்தனர். இந்நிலையில், கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சைக்காக மருத்துவ குழு மூலம் ஆயத்த பரிசோதனைகள் செய்து வந்த நிலையில் திடீரென கடுமையான வயிற்றுவலி, மூச்சுத்திணறல் ஏற்பட்டது. அதன் பின்னர் சிகிச்சை பலனின்றி சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தான். இதனையடுத்து அவரின் உடல் சொந்த ஊரான செம்பட்டி அருகே எஸ்.பாறைப்பட்டி கிராமத்திற்கு கொண்டு வரப்பட்டது. அப்போது, பெற்றோர் மற்றும் உறவினர்கள் கதறி அழுத சம்பவம் அக்கிராமத்தையே கடும் சோகத்தில் ஆழ்த்தியது.

    மேலும், அந்த குடும்பத்திற்கு அடுத்த பெரும் பேரிடியாக, அந்த தம்பதியினரின் மற்றொரு மகனான ஹரீசுக்கும் அதே மர்ம நோயின் பாதிப்பு இருந்தது தெரியவந்துள்ளது. அவனுக்கும் கல்லீரல் தொடர்பான தீவிர சிகிச்சையளிக்க வேண்டும் என டாக்டர்கள் கூறியுள்ளனர். ஏற்கனவே பல லட்சங்களை செலவு செய்து பல்வேறு மருத்துவமனைகளுக்கு சென்று தனது ஒரு மகனை காப்பாற்ற முடியாமல் போன நிலையில் மற்றொரு மகனுக்கும் அதே தொற்று ஏற்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    அந்த கொடிய நோயால் மூத்த மகன் முகேஸை பரிகொடுத்த பெற்றோர்களுக்கு, இளைய மகனுக்கும் அதேநிலை என்பதால், பெற்றோர்கள் மட்டுமின்றி உறவினர்கள் என அனைவரும் கடும் சோகத்தில் உள்ளனர். எனவே தமிழக அரசு மர்ம நோயால் பாதிக்கப்பட்ட சிறுவனின் மருத்துவ சிகிச்சைக்கு உதவ வேண்டும். மேலும் இந்த நோய்க்கான காரணம் குறித்தும் தெளிவுபடுத்த வேண்டும் என பெற்றோர் மற்றும் உறவினர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

    • விவசாயத்திற்கு அடுத்தபடியாக மாடு ஆடு போன்ற கால்நடைகளை வளர்த்து வருகின்றனர்.
    • அதிகப்படியான கனமழை கோடை வெயில் போன்ற இயற்கை சீற்றங்களால் கால்நடைகள் பெரிதும் பாதிக்கப்படுகின்றன.

    விழுப்புரம்:

    மரக்காணம் ஒன்றியத்திற்கு உட்பட்டது கந்தாடு ஊராட்சி இப்பகுதியில் உள்ள காணி மேடு கந்தன் பாளையம் மண்டகப்பட்டு குரும்பூரம் முதலியார் பேட்டை ஆகிய கிராமங்களில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட விவசாயிகள் உள்ளனர். இவர்கள் விவசாயத்திற்கு அடுத்தபடியாக மாடு ஆடு போன்ற கால்நடைகளை வளர்த்து வருகின்றனர்.

    அப்பகுதியில் அதிகப்படியான கனமழை கோடை வெயில் போன்ற இயற்கை சீற்றங்களின் பொழுது விவசாயம் பாதிக்க ப்பட்டால் கால்நடை கள் வளர்ப்ப தின் மூலம் கிடைக்கும் கிடைக்கும் வருமானத்தைக் கொண்டு குடும்பம் நடத்தும் நிலை உள்ளது. இந்நிலையில் மரக்காணம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் கடந்த ஒரு வாரமாக கனமழை பெய்து வருகிறது. இதுபோல் இரவு நேரங்களில் கடும் பனிப்பொழிவும் உள்ளது.

    இதன் காரணமாக தந்தாடு ஊராட்சியில் உள்ள காணி மேடு மண்டகப்பட்டு குறும்புறம் உள்ளிட்ட கிராமங்களில் இரண்டா யிரத்துக்கும் மேற்பட்ட பசு மாடுகள் மர்ம நோயால் பாதிக்க ப்பட்டுள்ளது. இதுபோல் பாதி ப்பட்டுள்ள கா ல்நடைகளுக்கு உடனடியாக சிகிச்சை அளிக்க போதிய கால்நடை மருத்துவர்களும் இங்கு இல்லை. இதனால் மர்ம நோயால் பாதிக்கப்படும் கால்நடைகள் அடுத்தடுத்து உயிர் இழந்து வருகிறது. இதனால் கால்நடைகளை வளர்க்கும் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.  எனவே இப்பகுதியில் உள்ள விவசாயிகளின் நலன் கருதி மண்டகப்பட்டு கிராமத்தில் சிறப்பு கால்நடை மருத்துவ முகாம் அமைத்து சுற்று வட்டார கிராமங்களில் இருக்கும் கால்ந டைகளுக்கும் சிகிச்சை அளி க்க மா வட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை வைத்து ள்ளனர்.

    ×