search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மர்ம உருவம்"

    • சில நாட்களுக்கு முன்பு தாமோதரன் வியாபாரத்திற்காக வெளியூர் சென்று இருந்தார்.
    • வீடு கிராமத்தை தள்ளி மயானம் மற்றும் ஆற்று பகுதிக்கு செல்லக்கூடிய பகுதியில் அமைந்துள்ளது.

    ஆலங்காயம்:

    திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த நடுபட்டறை கிராமத்தை சேர்ந்தவர் தாமோதிரன். இவர் தேங்காய் மண்டி வைத்து வியாபாரம் செய்து வருகிறார்.

    சில நாட்களுக்கு முன்பு தாமோதரன் வியாபாரத்திற்காக வெளியூர் சென்று இருந்தார்.

    இவரது வீடு கிராமத்தை தள்ளி மயானம் மற்றும் ஆற்று பகுதிக்கு செல்லக்கூடிய பகுதியில் அமைந்துள்ளது.

    கடந்த 3 நாட்களாக தினமும் நள்ளிரவில் வீட்டின் கதவு தட்டும் சத்தம் கேட்கிறது. கதவை யாரோ தட்டுவதால் தாமோதரன் குடும்பத்தினர் பீதியில் இருந்தனர். வெளியூரில் இருந்து வந்த தாமோதரன் வீட்டிற்கு வந்தார். அவரது மகன் நடந்த சம்பவத்தை தெரிவித்தார்.

    அவர் தனது வீட்டில் பொருத்தப்பட்டிருந்த கேமரா காட்சிகளை பார்த்தார். அப்போது தினமும் நள்ளிரவில் ஒரே நேரத்தில் வெள்ளை நிறத்தில் ஒளி போன்ற உருவம் செல்வது பதிவாகி இருந்தது. இதனால் கிராமத்தில் பேய் பீதி ஏற்பட்டுள்ளது.

    அந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் பரவி கிராம மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

    கிராமத்தில் உள்ள சிலர் பேய் எல்லாம் ஒன்றும் கிடையாது என்று தெரிவித்தனர். ஆனாலும் வீடியோவில் வரும் உருவம் பயமூட்டுவதாக உள்ளது.

    ×