search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மருந்துவாழ்மலை"

    • இன்றுடன் நிறைவு பெற்றது
    • இந்த மகா தீபம் கன்னியாகுமரி சுற்று வட்டார பகுதியில் சுமார் 30 கிலோ மீட்டர் தூரம் வரை தெளிவாக தெரிந்தது.

    கன்னியாகுமரி:

    ஆண்டுதோறும் கார்த் திகை மாதம் கிருத்திகை நட்சத்திரத்தன்று கார்த் திகை தீபத்திருவிழா கொண் டாடப்படுவது வழக்கம்.

    அதேபோல இந்த ஆண்டு கார்த்திகை மாதம் கிருத்திகை நட்சத்திரமான கடந்த 6-ந்தேதி கார்த்திகை தீபத்திருவிழா கொண்டா டப்பட்டது. இதையொட்டி அன்று மாலை 6 மணிக்கு கன்னியாகுமரி அருகே உள்ள பொற்றையடி வைகுண்ட பதியில் அமைந்து உள்ள 1800 அடி உயர மருந்துவாழ் மலை உச்சியில் "மகாதீபம்" ஏற் றப்பட்டது.

    மருந்துவாழ் மலை உச்சியில் ஏற்றப்பட்ட இந்த மகா தீபம் கன்னியாகுமரி சுற்று வட்டார பகுதியில் சுமார் 30 கிலோ மீட்டர் தூரம் வரை தெளிவாக தெரிந்தது.

    3 நாட்கள் இரவு- பகலாக தொடர்ந்து எரிந்து கொண்டிருந்த இந்த மகா தீபம் இன்றுடன் நிறைவு பெற்றது. இதையொட்டி அங்கு விசேஷ பூஜைகள் நடத்தி கார்த்திகை மகா தீபம் நிறைவு செய்யப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    இதற்கான ஏற்பாடுகளை மருந்து வாழ்மலை பாது காப்பு இயக்க தலைவர் ஜெகன் தலைமையில் பக்தர் கள் செய்து இருந்தனர்.

    • பக்தர்களுக்கு 9 வகையான பிரசாதம் வழங்கப்பட்டது
    • கார்த்திகைமாத சோமவார பிரதோஷம் நடைபெற்றது.

    கன்னியாகுமரி:

    கன்னியாகுமரி அருகே உள்ள கொட்டாரம் பொற்றையடி வைகுண்டபதியில் 1800 அடி உயரமருந்து வாழ்மலை அமைந்து உள்ளது.

    இந்த மலையில் ஜோதி லிங்கேஸ்வரர் உடனுறை ஸ்ரீபர்வத வர்த்தினி அம்மன் திருக்கோவில் அமைந்து உள்ளது. இந்த கோவிலில் கார்த்திகைமாத சோமவார பிரதோஷம்  நடைபெற்றது.இதையொட்டி மாலை 4.30 மணிக்கு நந்தீஸ்வரருக்கும் மூலவரான ஜோதி லிங்கேஸ்வரருக்கும் சிறப்பு அபிஷேகம் நடந்தது.

    அப்போது எண்ணெய், மஞ்சள் பொடி, மாப்பொடி, திருமஞ்சனப்பொடி, பால், தயிர், பஞ்சாமிர்தம், தேன், நெய், நாட்டுசர்க்கரை, இளநீர், விபூதி, பன்னீர், சந்தனம், உள்பட 16 வகையான வாசனைத் திரவியங்களால் இந்த அபிஷேகம் நடத்தப்பட்டது.

    பின்னர் மாலை 6 மணிக்கு அலங்கார தீபாராதனை நடந்தது. இதில் பக்தர்களின் பஜனை நிகழ்ச்சி இடம் பெற்றிருந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    பக்தர்களுக்கு சர்க்கரை பொங்கல், பால் பாயாசம், வெண்பொங்கல் கொண்டக்கடலை, எள்ளு, உளுந்து, பஞ்சாமிர்தம், சாம்பார் சாதம் ஆகிய 9 வகை யான அருட் பிரசாதங்கள் வழங்கப்பட்டன.

    • ஐப்பசி மாத சனி பிரதோஷம் நேற்று மாலை நடைபெற்றது.
    • பக்தர்களுக்கு 9 வகையான பிரசாதம் வழங்கப்பட்டது

    கன்னியாகுமரி:

    கன்னியாகுமரி அருகே உள்ள கொட்டாரம் பொற்றையடி வைகுண்ட பதியில் 1800 அடி உயர மருந்துவாழ்மலை அமைந்து உள்ளது. இந்த மலையில் ஜோதிலிங்கேஸ்வரர் உடனுறை ஸ்ரீபர்வதவர்த்தினி அம்மன் கோவில் அமைந்து உள்ளது.

    இந்த கோவிலில் ஐப்பசி மாத சனி பிரதோஷம் நேற்று மாலை நடைபெற்றது. இதையொட்டி மாலை 4.30 மணிக்கு நந்தீஸ்வரருக்கும் மூலவரான ஜோதி லிங்கேஸ்வரருக்கும் சிறப்பு அபிஷேகம் நடந்தது. அப்போது எண்ணை, மஞ்சள் பொடி, மாப்பொடி, திருமஞ்சனப்பொடி, பால், தயிர், பஞ்சாமிர்தம், தேன், நெய், நாட்டு சர்க்கரை, இளநீர், விபூதி, பன்னீர், சந்தனம், உள்பட 16 வகையான வாசனைத் திரவியங்களால் இந்த அபிஷேகம் நடத்தப்பட்டது.

    இந்த அபிஷேகத்தை சிவாச்சாரியார் பிரபாகரன் அடிகளார் நடத்தினார். பின்னர் மாலை 6 மணிக்கு அலங்கார தீபாராதனை நடந்தது. இதில் சிவனடியார் பேராசிரியர் அசோகன் தலைமையில் பக்தர்களின் பஜனை நிகழ்ச்சி இடம் பெற்றிருந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு சர்க்கரை பொங்கல், பால் பாயாசம், வெண்பொங்கல் கொண்டக்கடலை, எள்ளு, உளுந்து, பஞ்சாமிர்தம், சாம்பார் சாதம் ஆகிய 9 வகையான அருட் பிரசாதங்கள் வழங்கப்பட்டன.

    ×