search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மருந்து விலை"

    • மருந்து வணிகர்கள் சங்க பொதுக்குழு கூட்டம், திருத்துறைப்பூண்டியில் நடைபெற்றது.
    • ஒரே மருந்து, ஒரே விலை என்பதை நாடு முழுவதும் உறுதி செய்ய வேண்டும்.

    திருத்துறைப்பூண்டி:

    திருவாரூர் மாவட்ட, மருந்து வணிகர்கள் சங்க பொதுக்குழு கூட்டம், திருத்துறைப்பூண்டியில் சங்கத்தின் தலைவர் லட்சுமணன் தலைமையில் நடைபெற்றது.

    செயலாளர் ராமச்சந்திரன் முன்னிலை வகித்தார்.

    பொருளாளர் நடராஜன், நிர்வாகிகள் பாபு, பாஸ்கரன், மற்றும் திருவாரூர் மாவட்டம் முழுவதுமிருந்து வந்திருந்த மருந்து வணிகர்கள் பங்கேற்றனர்.

    கூட்டத்தில், ஆன்லைன் மருந்து விநியோகஸ்தர்களுக்கு உரிமம் வழங்கப்படாத நிலையில், மத்திய அரசின் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் ஆன்லைன் மருந்து விநியோகஸ்தர்களை பேச்சுவார்த்தைக்கு அழைப்பதை தவிர்க்க வேண்டும்.

    ஒரே மருந்து, ஒரே விலை என்பதை நாடு முழுவதும் உறுதி செய்ய வேண்டும்.

    உரிமங்கள் இன்றி ஆன்லைன் மூலம் மருந்துகள் விற்பனை செய்யப்படுவதை தடுத்து நிறுத்த வேண்டும்.

    உரிமங்கள் இல்லாத மருந்து வணிகர்களுக்கு மருந்துகளை விநியோகம் செய்கின்ற விநியோகஸ்தர்கள், தயாரிப்பு நிறுவனங்கள் மீது மருந்துகள் கட்டுப்பாட்டுத் துறை வழக்கு தொடர வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    ×