search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மருந்தியல்"

    • பெரம்பலூர் தந்தை ரோவர் மருந்தியல் கல்லூரியில் 62-ம் தேசிய மருந்தியல் வாரவிழா நேற்று தொடங்கியது.
    • தொடர்ந்து கல்லூரி வாழ்க்கையை பெரிதும் ரசித்து வாழ்வது மாணவர்க ளா? அல்லது மாணவிகளா? என்ற தலைப்பில் பட்டி மன்றம் நடந்தது

    பெரம்பலூர்

    பெரம்பலூர் தந்தை ரோவர் மருந்தியல் கல்லூரியில் 62-ம் தேசிய மருந்தியல் வாரவிழா நேற்று தொடங்கியது.

    விழாவையொட்டி நடந்த கருத்தரங்கிற்கு ரோவர் கல்வி நிறுவனங்களின் மேலாண் தலைவர் வரதராஜன் தலைமை வகித்தார். துணை மேலாண் தலைவர் அசோக் வரதராஜன் முன்னிலை வகித்தார். அறங்காவலர் மகாலட்சுமி வரதராஜன் குத்துவிளக்கு ஏற்றி விழா வினை துவங்கி வைத்தார்.

    இதில் முதன்மை விருந்தி னராக சர்வதேச வணிக துணை பொது மேலாளர் ராஜேஷ் கிருஷ்ணன் கலந்து கொண்டு மாணவர்களுக்கு சர்வதேச வணிகத்தில் தொழில்மு னைவு மற்றும் தொழில் மேம்பாட்டு திட்டத்தின் இன்றியமை யான்மை குறித்து விரிவாக எடுத்து ரைத்தார்.

    தொடர்ந்து கல்லூரி வாழ்க்கையை பெரிதும் ரசித்து வாழ்வது மாணவர்க ளா? அல்லது மாணவிகளா? என்ற தலைப்பில் பட்டி மன்றம் நடந்தது . இதில் பேராசிரியர் நவநீதகிருஷ்ணன் நடுவராக பணியாற்றினார்.

    முன்னதாக கல்லூரியின் முதல்வர் நெப்போலியன் வரவேற்றார். முடிவில் துணை முதல்வர் மாரிய ம்மாள் நன்றி கூறினார் னார். கருத்தரங்கில் 500-க்கும் மேற்பட்ட மாண வர்கள் கலந்துகொண்டனர்.

    இதற்கான ஏற்பாடுகளை தலைமை அலுவலக மேலாளர் ஆனந்தன், கல்வி ஒருங்கிணைப்பாளர் சக்திஷ்வரன், அலுவலக மேலாளர் ராஜா மற்றும் ரோவர் மருந்தியல் கல்லூரி யின் பேராசிரியர்கள் செய்திருந்தனர்.

    ×