search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மரவள்ளிக் கிழங்கு"

    • பரமத்திவேலூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஆயிரக்கணக்கான ஏக்கரில் மரவள்ளி கிழங்கு பயிரிடப்பட்டுள்ளது.
    • மரவள்ளி கிழங்குகளை வாங்கும் ஆலை உரிமையாளர்கள் மரவள்ளி கிழங்கில் உள்ள மாவுச்சத்து மற்றும் புள்ளிகள் அடிப்ப டையில் விலை நிர்ணயம் செய்கின்றனர்.


    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் சுற்றுவட்டாரப் பகுதிகளான எஸ்.வாழவந்தி, பெரிய கரச பாளையம், செங்கப்பள்ளி, பரமத்தி, பொத்தனூர், கூடச்சேரி, கபிலர்மலை, சின்னமருதூர், சோழசிரா மணி, பெருங்குறிச்சி, ஆனங்கூர், பெரிய சோளிபாளையம், சின்ன சோளிபாளையம், பெரிய மருதூர், சின்ன மருதூர், செல்லப்பம்பாளையம், ஜமீன் இளம்பிள்ளை, குறும்பல மகாதேவி, சுள்ளிப்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் ஆயிரக்கணக்கான ஏக்கரில் மரவள்ளி கிழங்கு பயிரிடப்பட்டுள்ளது.

    இப்பகுதிகளில் விளை யும் மரவள்ளி கிழங்குகளை, உள்ளூர் பகுதிகளுக்கு வரும் வியாபாரிகள் வாங்கி புதன்சந்தை, புதுச்சத்திரம், மின்னாம்பள்ளி, நாமகிரிப்பேட்டை, கீரனூர் சின்னசேலம், மல்லூர், மலவேப்பங்கொட்டை, ஆத்தூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் செயல்பட்டு வரும் ஜவ்வரிசி மற்றும் கிழங்கு மாவு தயாரிக்கும் கிழங்கு ஆலைகளுக்கு அனுப்பி வருகின்றனர். மேலும் சிப்ஸ் தயார் செய்யவும் வியாபாரிகள் அதிக அளவில் வாங்கிச் செல்கின்றனர்.

    மரவள்ளி கிழங்குகளை வாங்கும் ஆலை உரிமையாளர்கள் மரவள்ளி கிழங்கில் உள்ள மாவுச்சத்து மற்றும் புள்ளிகள் அடிப்ப டையில் விலை நிர்ணயம் செய்கின்றனர். அதேபோல் ஜவ்வரிசி விலை உயரும் போது மரவள்ளிக்கிழங்கு விலையை உயர்த்தியும், ஜவ்வரிசி விலை வீழ்ச்சி அடையும்போது மர வள்ளிக்கிழங்கு விலையை குறைத்தும் வாங்கிச் செல்கின்றனர்.

    கடந்த வாரம் மரவள்ளி கிழங்கு டன் ஒன்று ரூ.11 ஆயிரத்து 500-க்கு விற்பனையானது. தற்போது டன் ஒன்றுக்கு ரூ.500 வரை உயர்வடைந்து ரூ.12 ஆயிரத்திற்கு விற்பனை யாகிறது. அதே போல் கடந்த வாரம் சிப்ஸ் தயாரிக்கும் மரவள்ளி கிழங்கு டன் ஒன்று ரூ.12ஆயிரத்திற்கு விற்பனையானது. தற்போது டன் ஒன்றுக்கு ரூ.1000 வரை உயர்வடைந்து ரூ.13 ஆயிரத்திற்கு விற்பனையாகிறது.

    மரவள்ளி கிழங்கு வரத்து குறைந்துள்ளதால் விலை உயர்வடைந்து உள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.


    ×