search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மரம் நடும் நிகழ்ச்சி"

    • நீர் நிலைகளில் மரம் நடும் நிகழ்வு மேற்கொள்ளப் பட்டது.
    • புங்கன் குட்டையில் பலன் தரும் மரக்கன்றுகள் நடப்பட்டது.

    பாப்பிரெட்டிப்பட்டி,

    தருமபுரி மாவட்டம், பொ.மல்லாபுரம் பேரூராட்சியில் நகர தூய்மைக்கான மக்கள் இயக்கம் செயல்பாடு நடைபெற்றது. நீர் நிலைகளில் மரம் நடும் நிகழ்வு மேற்கொள்ளப் பட்டது.

    பேரூராட்சி தலைவர் சாந்தி, செயல் அலுவலர் நாகராஜன், பேரூராட்சி துணை தலைவர் ஸ்ரீதர் மற்றும் மன்ற உறுப்பினர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.

    நிகழ்ச்சியில் பில்பருத்தி புங்கன் குட்டையில் பலன் தரும் மரக்கன்றுகள் நடப்பட்டது.

    மேலும் சேலம் மெயின் ரோடு வழியாக பொதுமக்களுக்கான விழிப்புணர்வு பேரணி பேரூராட்சி தலைவரால் கொடி அசைத்து தொடங்கி வைக்கப்பட்டது.

    ×