search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மனது"

    • ஒவ்வொரு தனி மனிதனும் தங்களது குடும்பத்தினரை எண்ணிப்பார்க்க வேண்டும்.
    • போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் அறிவுரை

    நாகர்கோவில்:

    தமிழகம் முழுவதும் போைத பொருள் ஒழிப்பில் போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர். குமரி மாவட் டத்திலும் போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டு போதை பொருட்களை ஒழித்து வருகிறார்.

    இந்த நிலையில் சர்வதேச போதை ெபாருட்கள் ஒழிப்பு தினத்தையொட்டி அவர், ஒரு வீடியோ வெளி யிட்டுள்ளார். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. அதில், போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் கூறி இருப்பதாவது:-

    ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் 26-ந் தேதியன்று உலக போதை பொருள் ஒழிப்பு மற்றும் சட்டவிரோத கடத்தலுக்கு எதிரான சர்வதேச தினம் கடைபிடிக்கப்பட்டு வரு கிறது. இந்த நாளில் போதை பொருட்களை ஓழிப்போம் என முக்கியமாக உறுதி மொழியை அனைவரும் எடுப்போம். ஆரோக்கி யமான சமூதாயத்தை சீரழிப்பதில் முக்கிய காரணமாக இருப்பது போதை பொருட்கள் பழக்கம்.

    ஒவ்வொரு தனி மனிதனும் தங்களது குடும்பத்தினரை எண்ணிப்பார்க்க வேண்டும். போதைக்கு அடிமையாகாமல் பிற நல்ல வழிகளில் கவனம் செலுத்தவேண்டும். குறிப்பாக இளைய தலைமுறையினர் போதை பொருட்களுக்கு அடிமையாக கூடாது. உடற்பயிற்சி, யோகா, புத்தகங்கள் வசிப்பது இப்படி பல வழிகளை இளைஞர்கள் கடைபிடித்து மனதை ஒழுக்கத்துடன் வைத்திருக்க வேண்டும்.

    போதை பொருட்களின் பக்கவிளைவுகள் மிக கொடூரமாக இருக்கும். நமது உடல் ஆரோக்கியம், மனதையும் உருக்குலைக்கும். போலீஸ் சூப்பிரண்டு என்ற முறையில் சொல்கிறேன், போதை பொருட்கள் இல்லாத சமுதாயத்தை நாம் உருவாக்கி, அதனை அடியோடு வேறறுக்க வேண்டும்.

    இப்படி நாட்டின் ஒவ்வொரு குடிமகனும் போதை பொருட்கள் இல்லாத சமூதாயத்தை உருவாக்குவோம் என்ற உறுதிமொழி எடுத்து பின்பற்றினால் நமது நாடு அசுர வேகத்தில் தலைசிறந்த நாடாக மாறிவிடும். போதை பொருட்கள் தடுப்பு குறித்து குமரி மாவட்டத்தில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டு வருகின்றன.

    இவ்வாறு அதில் கூறி உள்ளார்.

    ×