என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு"
- மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் இன்று அதிகாலை மண்ணடியில் உள்ள அஷ்ரப்பின் வீட்டில் அதிரடி சோதனை நடத்தினர்.
- அஷ்ரப்பை அதிகாரிகள் விசாரணைக்காக மத்திய வருவாய்வு அலுவலகத்துக்கு அழைத்துச் சென்றனர்.
ராயபுரம்:
சென்னை விமான நிலையத்தில் வெளிநாடுகளில் இருந்து தங்கம் கடத்தி வருவது அதிகரித்து உள்ளது. இதில் சிக்குபவர்கள் பெரும்பாலும் குருவிகளாக சென்று வருபவர்கள் என்பதால் கடத்தல் கும்பலை சேர்ந்தவர்கள் சிக்குவதில்லை.
இந்த நிலையில் சென்னை விமான நிலையத்தில் தங்கம் கடத்தி வந்த மண்ணடி மரக்காயர் தெருவை சேர்ந்த அஷ்ரப் (வயது 30) என்பவர் உள்பட சிலர் சிக்கினர். அவர்களிடம் இருந்து 6 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. விசாரணையில் அவர்கள் குருவியாக சென்று தங்கம் கடத்தலில் ஈடுபட்டு வந்தது தெரியவந்தது.
இதைத்தொடர்ந்து மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் இன்று அதிகாலை மண்ணடியில் உள்ள அஷ்ரப்பின் வீட்டில் அதிரடி சோதனை நடத்தினர்.
இந்த சோதனையில் 1 ½ கிலோ தங்கம், ரூ.35 லட்சம் பணம் பறிமுதல் செய்யப்பட்டது.
இதைத்தொடர்ந்து அஷ்ரப்பை அதிகாரிகள் விசாரணைக்காக மத்திய வருவாய்வு அலுவலகத்துக்கு அழைத்துச் சென்றனர். அவரிடம் தங்கம் கடத்தல் கும்பல் குறித்து தீவிர விசாரணை நடந்து வருகிறது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்