search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மதுபானக்கடைகளை"

    • 1-ந்தேதி (திங்கட்கிழமை) அன்று தொழிலாளர் தினத்தை முன்னிட்டு மதுபானக்கடைகள் மூடப்பட வேண்டும்.
    • டாஸ்மாக் மதுபானக்கடைகளுடன் இணைந்துள்ள மதுபானக்கூடங்கள் அனைத்தும் வருகிற 1-ந்தேதி மூடப்பட வேண்டும்.

    சேலம்:

    சேலம் மாவட்ட கலெக்டர் கார்மேகம் விடுத்துள்ள செய்தி குறிப்பில் தெரிவித்திருப்ப தாவது:-

    வருகின்ற 1-ந்தேதி (திங்கட்கிழமை) அன்று தொழிலாளர் தினத்தை முன்னிட்டு மதுபானக்க டைகள் மூடப்பட வேண்டுமென அரசால் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, சேலம் மாவட்டத்தில் உள்ள அனைத்து எப்.எல்.1, எப்.எல்.2, எப்.எல்.3, எப்.எல்.3ஏ மற்றும் எப்.எல்.3ஏஏ உரிமம் பெற்ற ஓட்டல் மற்றும் கிளப்புகளில் இயங்கிவரும் மதுபானக்கூடங்கள், டாஸ்மாக் மதுபானக்கடை கள் (எப்.எல்.11) மற்றும் டாஸ்மாக் மதுபானக்கடைகளுடன் இணைந்துள்ள மதுபானக்கூடங்கள் அனைத்தும் வருகிற 1-ந்தேதி மூடப்பட வேண்டும். மேலும், மேற்காணும் நாளில் இதனை மீறி விற்பனை செய்பவர்கள் மீது அரசு விதிகளின்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் அதில் தெரிவித்துள்ளார்.

    ×