என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "மதுபாட்டில்கொள்ளை"
- மணப்பாறையை அடுத்த துவரங்குறிச்சி அருகே மோர்னிமலை பகுதியில் திருச்சி-மதுரை தேசிய நெடுஞ்சாலை ஓரம் டிரைவர் சற்று ஓய்வு எடுப்பதற்காக லாரியை நிறுத்தி வைத்திருந்தார்.
- அப்போது லாரியின் மேற்பகுதியில் கட்டி மூடி வைக்கப்பட்டிருந்த தார்ப்பாயை மர்ம நபர்கள் கிழித்து எரிந்தனர்.
திருச்சி
காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூரில் செயல்பட்டு வரும் தனியாருக்கு சொந்தமான மதுபான தொழிற்சாலையில் இருந்து மதுபாட்டில்களை ஏற்றிக் கொண்டு லாரி ஒன்று திருநெல்வேலியில் உள்ள டாஸ்மாக் குடோனிற்கு சென்று கொண்டிருந்தது.
திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த துவரங்குறிச்சி அருகே மோர்னிமலை பகுதியில் திருச்சி-மதுரை தேசிய நெடுஞ்சாலை ஓரம் டிரைவர் சற்று ஓய்வு எடுப்பதற்காக லாரியை நிறுத்தி வைத்திருந்தார்.
அப்போது லாரியின் மேற்பகுதியில் கட்டி மூடி வைக்கப்பட்டிருந்த தார்ப்பாயை மர்ம நபர்கள் கிழித்து எரிந்தனர். மேலும் உள்ளே வைக்கப்பட்டு இருந்த மது பாட்டில்களையும் கொள்ளையடித்து சென்றுள்ளனர். ஓய்வுக்கு பிறகு மீண்டும் லாரியை இயக்க முயன்றபோதுதான் தார்ப்பாயை கிழித்து மது பாட்டில்கள் கொள்ளை போயிருப்பது தெரியவந்தது.
பின்னர் லாரி டிரைவர் காந்தி (வயது 51) என்பவர் மது பாட்டில்களை சரிபார்த்தபோது சுமார் ரூ.2.50 லட்சம் மதிப்புள்ள மது பாட்டில் கொள்ளை போயிருப்பது தெரியவந்தது. பின்னர் டிரைவர் காந்தி துவரங்குறிச்சி போலீஸ் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தேசிய நெடுஞ்சாலையில் நள்ளிரவில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லாரியில் மது பாட்டில்கள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்