என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "மதநல்லிணக்க பேரணி"
- இந்திய ஜனநாயக மக்கள் கட்சி சார்பில் நடந்தது
- தமிழகத்தில் டெட் மற்றும் நீட் தேர்வு ரத்து செய்ய வலியுறுத்தல்
அரக்கோணம்:
அகில இந்திய ஜனநாயக மக்கள் கட்சி சார்பில் மத நல்லிணக்கத்தை வலியுறுத்தி கிறிஸ்துவ உரிமை பேரணி அரக்கோணத்தில் நடந்தது.
அகில இந்திய கிறிஸ்துவ மக்கள் கட்சி மற்றும் அகில இந்திய ஜனநாயக மக்கள் கட்சி சார்பில் மத நல்லிணக்கத்தை வலியுறுத்தி மாபெரும் கிறிஸ்துவ உரிமை பேரணி அரக்கோணம் பழைய பஸ் நிலையத்தில் தொடங்கியது. இந்த ஊர்வலத்துக்கு அகில இந்திய ஜனநாயக மக்கள் கட்சி நிறுவனர் ஐசக் தலைமை வகித்து தொடங்கி வைத்தார்.
மாநில பொதுச் செயலாளர் ரூபன் சரவணன், மண்டல பொதுச்செயலாளர்கள் டேவிட் குட்டி, பர்னபாஸ் சைமன், மேலாளர் ஜெய்சன், மகளிர் அணி செயலாளர் பிரேமா செல்வகுமாரி, மாவட்ட செயலாளர்கள் குமார், ஸ்ரீதர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இளைஞரணி செயலாளர் டாக்டர் கிளிண்டன் வரவேற்றார்.
இந்த ஊர்வலம் அரசு மருத்துவமனை, சுவால்பேட்டை வழியாக தாலுகா அலுவலகம் அருகில் நிறைவடைந்தது. அதைத்தொடர்ந்து நடந்த கூட்டத்தில் அகில இந்திய ஜனநாயக மக்கள் கட்சி நிறுவனர் ஐசக் பேசியதாவது:-
சிறுபான்மை கிறிஸ்தவர்களுக்கு 10.5 சதவீதம் தனி இட ஒதுக்கீடு வழங்க வேண்டும். தமிழகத்தில் டெட் மற்றும் நீட் தேர்வு ரத்து செய்ய வேண்டும்.
தமிழகத்தில் அந்தந்த மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் சீனியா ரிட்டி அடிப்படையில் வேலை வாய்ப்புகள் வழங்க வேண்டும். ஆதிதிராவிடர் கிறிஸ்தவ சிறுபான்மை மற்றும் ஆதிதிராவிட சமூகத்தைச் சேர்ந்த மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை அந்தந்த கல்லூரிகளுக்கு தமிழக அரசு வழங்கிட வேண்டும். தலித் கிறிஸ்தவர்களை எஸ்.சி பட்டியலில் சேர்க்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்