search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மகிளா காங்கிரஸ்"

    • உடன்குடியில் இந்திரா காந்தி விருது வழங்கும் விழா நடந்தது.
    • சாதனை புரிந்த 5 பெண்களுக்கு விருது வழங்கப்பட்டது.

    உடன்குடி:

    தூத்துக்குடி தெற்கு மாவட்ட மகிளா காங்கிரஸ் சார்பில் உலக மகளிர் தின விழாவையொட்டி உடன்குடியில் இந்திரா காந்தி விருது வழங்கும் விழா நடந்தது. தெற்கு மாவட்ட மகிளா காங்கிரஸ் தலைவி சிந்தியா தலைமை தாங்கினார். ஸ்ரீவைகுண்டம் நகர தலைவி மங்களச் செல்வி, மாவட்ட பொதுச் செயலாளர் ஆக்னல் ரிஹானா, திருச்செந்தூர் வட்டார தலைவி பட்டு கனி ஆகியோர் முன்னிலை வகித்தனர். தமிழ்நாடு மகிளாஇணைச் செயலாளரும், உடன்குடி டவுன் கவுன்சிலருமான அன்பு ராணி வரவேற்றார். பல்வேறு துறைகளில் சாதனை புரிந்த 5 பெண்களை தேர்வு செய்து அவர்களுக்கு இந்திரா காந்தி விருது வழங்கி கவுரவித்தனர்.

    இதில் முன்னாள் எம்.எல்.ஏ., டேனியல் ராஜ், மாநில வக்கீல் பிரிவு துணைத் தலைவர் மகேந்திரன், மாநில பொதுக்குழு உறுப்பினர் சிவசுப்பிரமணியன், முன்னாள் மாவட்ட தலைவர் ஜெயக்குமார், தமிழ்நாடு மகிளா காங்கிரஸ் செயலாளர் பியூலா விஜயராஜா, முன்னாள் மாவட்ட பொருளாளர் நடராஜன், உடன்குடி வட்டார தலைவர் துரைராஜ் ஜோசப், நகர தலைவர் முத்து, மாவட்ட வக்கீல் பிரிவு தலைவர் வில்லின் பெலிக்ஸ், சாத்தான்குளம் (தெற்கு) வட்டார தலைவர் லூர்து மணி, மூத்த காங்கிரஸ் தலைவர் வெற்றிவேல் மற்றும் நேசபுரம் முத்துகுமார், ஹென்றி உட்பட பலர் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினர். முடிவில் மாவட்ட மகிளா காங்கிரஸ் பொருளாளர் சுலோச்சனா நன்றி கூறினார்.

    ×