என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "போலீஸ்காரர் தற்கொலை"
- திருமணமான 4 மாதத்தில் பரிதாபம்
- போலீசார் விசாரணை
திருவண்ணாமலை:
விழுப்புரம் மாவட்டம் கிடார் பகுதியைச் சேர்ந்தவர் வேணுகோபால் என்பவரது மகன் வீரமுத்து (வயது 27). இவர் கடந்த 2018-ம் ஆண்டு போலீஸ் வேலையில் சேர்ந்தார்.
2019-ம் ஆண்டு முதல் திருவண்ணாமலை ஆயுதப்படை போலீசில் பணியாற்றி வந்தார் இவருக்கு கடந்த 4 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இவரது மனைவியுடன் திருவண்ணாமலை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் பின்புறம் உள்ள ஆயுதப்படை போலீஸ் குடியிருப்பில் வசித்து வந்தார்.
இந்த நிலையில் ஆடி மாதம் பிறந்த காரணத்தால் வீரமுத்து அவரது மனைவியை மாமியார் வீட்டிற்கு அனுப்பி வைத்ததாக கூறப்படுகிறது.
நேற்று அவர் பணிக்கு செல்லாமல் வீட்டில் இருந்தார். மாலையில் வீரமுத்துவின் மனைவி அவருக்கு செல்போனில் தொடர்பு கொண்டு செல்போனை எடுத்து வீரமுத்து பேசாத காரணத்தால் சந்தேகமடைந்த அவரது மனைவி உடனடியாக வீரமுத்துவின் நண்பர் ஒருவருக்கு தகவல் தெரிவித்து அவரை நேரில் சென்று பார்க்குமாறு கூறியுள்ளார்.
அப்போது வீரமுத்து தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக கிடந்தார். திருவண்ணாமலை கிழக்கு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பிணத்தை மீட்டு பிரத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
வீரமுத்து தற்கொலைக்கு காரணம் என்ன என்று போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
அவர் குடும்ப பிரச்சினை காரணமாக தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணம் உள்ளதா என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளன.
- போலீஸ்காரர் காளிமுத்து கடந்த சில மாதங்களாக ஆன்லைன் ரம்மி விளையாடி வந்துள்ளார்.
- போலீஸ்காரர் காளிமுத்து கடந்த 2013-ம் ஆண்டு போலீஸ்துறையில் பணியில் சேர்ந்தார்.
கோவை:
விருதுநகரை சேர்ந்தவர் காளிமுத்து(வயது 29). இவர் கோவை மாநகர ஆயதப்படையில் போலீஸ்காரராக பணியாற்றி வந்தார்.
கோவையில் உள்ள சிறைச்சாலை மைதானத்தில் அரசு பொருட்காட்சி நடந்து வருகிறது. இங்கு கோவை மாநகர காவல்துறை சார்பில் அரங்கு அமைக்கப்பட்டுள்ளது. அந்த அரங்கில் கடந்த சில நாட்களாக போலீஸ்காரர் காளிமுத்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தார். நேற்றும் அவர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தார்.
இந்த நிலையில் நேற்று போலீஸ்துறை சார்பில் அமைக்கப்பட்டிருந்த அரங்கில் துப்பாக்கி குண்டு சத்தம் கேட்டது. இதில் அதிர்ச்சியடைந்தவர்கள் ஓடி சென்று பார்த்தனர்.
அப்போது பாதுகாப்பு பணியில் இருந்த போலீஸ்காரர் காளிமுத்து துப்பாக்கியால் தனது வயிற்றில் சுட்ட நிலையில் ரத்த வெள்ளத்தில் மயங்கி கிடந்தார்.
இதனை பார்த்த அங்கிருந்தவர்கள் உடனடியாக காளிமுத்துவை மீட்டு தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.
அங்கு அவரை டாக்டர்கள் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்து சிகிச்சை அளித்து வந்தனர்.
பரிசோதனையில் அவருக்கு கிட்னி பாதிப்பு ஏற்பட்டது தெரியவந்தது. தொடர்ந்து அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்தனர்.
இருப்பினும் சிகிச்சை பலன் அளிக்காமல் நள்ளிரவு 1 மணியளவில் போலீஸ்காரர் காளிமுத்து உயிரிழந்தார்.
இந்த சம்பவம் குறித்து ரேஸ்கோர்ஸ் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில், போலீஸ்காரர் காளிமுத்து கடந்த சில மாதங்களாக ஆன்லைன் ரம்மி விளையாடி வந்துள்ளார். எப்போதும் அதிலேயே அவர் மூழ்கி கிடந்துள்ளார். ஆன்லைன் ரம்மி விளையாடுவதற்காக அவர் பலரிடமும் கடன் வாங்கியுள்ளார்.
இதுவரை ஆன்லைன் ரம்மி விளையாடி ரூ.20 லட்சத்திற்கும் மேல் பணத்தை இழந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து தனது குடும்பத்தாரிடம் கூறியுள்ளார். இதையடுத்து அவர்கள் தங்கள் நகை உள்ளிட்ட பொருட்களை அடகு வைத்து காளிமுத்து வாங்கிய கடனை அடைத்துள்ளனர்.
இருப்பினும் தான் கடனாளி ஆகி விட்டதாலும், குடும்பத்தினரை தான் கஷ்டப்படுத்தி விட்டதாலும் காளிமுத்து கடந்த சில நாட்களாக மிகுந்த மன உளைச்சலில் இருந்தார். இந்த விரக்தியிலேயே நேற்று பணியில் இருந்த போலீஸ்காரர் காளிமுத்து துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டது போலீசாரின் விசாரணையில் தெரியவந்தது.
தொடர்ந்து போலீசார் இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இறந்த போலீஸ்காரர் காளிமுத்து கடந்த 2013-ம் ஆண்டு போலீஸ்துறையில் பணியில் சேர்ந்தார். பின்னர் அவர் 2016-ம் ஆண்டு கோவை மாநகர ஆயுதப்படை பிரிவுக்கு மாற்றப்பட்டார். 2-ம் நிலை காவலராக பணியாற்றி வந்தார். அவருக்கு தில்லை நாயகி என்ற மனைவியும் ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர்.
கோவையில் அரசு பொருட்காட்சி மைதானத்தில் பாதுகாப்பு பணியில் இருந்த போலீஸ்காரர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரிதாபத்தை ஏற்படுத்தியுள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்