search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "போலீஸ் ஏட்டு சஸ்பெண்டு"

    • அருண் குமாருக்கு நேற்று காலை ஜெயில் வளாகத்தில் உள்ள தோட்டத்தை சுத்தம் செய்யும் பணி ஒதுக்கப்பட்டது.
    • மதுரை மத்திய ஜெயிலில் ஆயுள் தண்டனை கைதி தப்பியோடிய சம்பவம் தொடர்பாக கரிமேடு போலீஸ் நிலையத்தில் புகார் தரப்பட்டு உள்ளது.

    மதுரை:

    தேனி மாவட்டம் தாமரைக்குளத்தைச் சேர்ந்தவர் ஆதி என்ற அருண்குமார் (வயது 40). இவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ஈரோட்டில் வேலைபார்த்து வந்தார்.

    அப்போது அங்கு மூதாட்டி ஒருவரை கொலை செய்ததாக, சித்தோடு போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கில் அருண் குமாருக்கு ஈரோடு மாவட்ட நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்தது. இதனைத் தொடர்ந்து அவர் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

    இந்த நிலையில் மதுரை மத்திய ஜெயிலுக்கு மாற்றம் வேண்டும் என்று அருண்குமார், சிறை நிர்வாகத்திடம் கோரிக்கை விடுத்து வந்தார். இதனைத் தொடர்ந்து அவரை ஜெயில் நிர்வாகம் மதுரைக்கு மாற்றியது. இங்கு அவர் சிறைவாசம் அனுபவித்து வந்தார்.

    அருண் குமாருக்கு 2 மனைவிகள் என்று கூறப்படுகிறது. அதில் 2-வது மனைவி கடந்த சில நாட்களுக்கு முன்பு ஜெயிலுக்கு வந்து கணவரை சந்தித்து சென்று உள்ளார்.

    அப்போது அவரிடம் அருண்குமார், மதுரை ஜெயிலில் வேலைபார்த்த வகையில் கிடைத்த 20 ஆயிரம் ரூபாய் சம்பளத்தை கொடுத்து அனுப்பி உள்ளார். அப்போது அவர்கள் 2 பேரும் என்ன பேசிக் கொண்டார்கள்? என்பது பற்றிய விவரம் தெரியவில்லை.

    இந்த நிலையில் அருண் குமாருக்கு நேற்று காலை ஜெயில் வளாகத்தில் உள்ள தோட்டத்தை சுத்தம் செய்யும் பணி ஒதுக்கப்பட்டது. அங்கு இவருடன் மேலும் 9 பேர் வேலை பார்த்து கொண்டு இருந்தனர். அப்போது அருண்குமார் போலீசுக்கு டிமிக்கி கொடுத்து விட்டு தப்பிச் சென்று விட்டார்.

    மதுரை மத்திய ஜெயிலில் ஆயுள் தண்டனை கைதி தப்பியோடிய சம்பவம் தொடர்பாக கரிமேடு போலீஸ் நிலையத்தில் புகார் தரப்பட்டு உள்ளது. இதற்கிடையே ஆயுள் தண்டனை கைதி அருண்குமார் தப்பிச் சென்ற விவகாரம் தொடர்பாக மதுரை மத்திய ஜெயில் அதிகாரிகள் விசாரணை நடத்தினார்கள்.

    அப்போது அங்கு பாதுகாவலர் பணியில் இருந்த போலீஸ் ஏட்டு பழனிக்குமார் கவனக்குறைவாக இருந்தது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து மதுரை மத்திய ஜெயில் நிர்வாகம் போலீஸ் ஏட்டு பழனிகுமாரை பணியில் இருந்து தற்காலிக நீக்கம் (சஸ்பெண்ட்) செய்து உத்தரவிட்டு உள்ளது.

    ×