search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "போலீசார் படுகாயம்"

    • வருமான வரி சோதனை முடிந்து சென்னை திரும்பியபோது விபத்து
    • எஸ்.பி.தீபா சத்யன் நலம் விசாரித்தார்

    வாலாஜா:

    ஆம்பூரில் ஃபரிதா குழுமத்திற்கு சொந்தமான தோல்பொருட்கள் தயாரிக்கும் தொழிற்சாலைகளில் கடந்த சில நாட்களாக சென்னையை சேர்ந்த வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வந்தனர்.

    வரி ஏய்ப்பு நடைபெற்றிருப்பதாக எழுந்த புகாரின் பேரில் மேற்கொள்ளப்பட்டு வந்த சோதனையில் சென்னை ஆயுதப்படையை சேர்ந்த பெண் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    இந்த நிலையில் நேற்று சோதனை நிறைவு பெற்றதை தொடர்ந்து, சென்னை ஆயுதப்படை பெண் போலீசார் வேன் மூலம் சென்னைக்கு திரும்பி வந்தனர்.

    சுமைதாங்கி அருகே வந்த போது முன்னாள் சென்ற லாரியின் மீது வேன் மோதி விபத்துக்குள்ளானது.

    இதில் வேனில் பயணித்த 13 பெண் காவலர்களில், 7 பேருக்கு காயம் அடைந்தனர். அவர்களை சிகிச்சைக்காக வாலாஜாபேட்டை அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

    மீதமுள்ள பெண் காவலர்கள் பாதுகாப்பாக காவேரிப்பாக்கம் காவல் நிலையத்திற்கு அழைத்து செல்லப்பட்டனர். சிகிச்சை பெற்று வந்த பெண் போலீசாரை ஆஸ்பத்திரிக்கு சென்று சந்தித்து எஸ்.பி.தீபா சத்யன் நலம் விசாரித்தார்.

    ×