என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "போலீசார் படுகாயம்"
- வருமான வரி சோதனை முடிந்து சென்னை திரும்பியபோது விபத்து
- எஸ்.பி.தீபா சத்யன் நலம் விசாரித்தார்
வாலாஜா:
ஆம்பூரில் ஃபரிதா குழுமத்திற்கு சொந்தமான தோல்பொருட்கள் தயாரிக்கும் தொழிற்சாலைகளில் கடந்த சில நாட்களாக சென்னையை சேர்ந்த வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வந்தனர்.
வரி ஏய்ப்பு நடைபெற்றிருப்பதாக எழுந்த புகாரின் பேரில் மேற்கொள்ளப்பட்டு வந்த சோதனையில் சென்னை ஆயுதப்படையை சேர்ந்த பெண் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
இந்த நிலையில் நேற்று சோதனை நிறைவு பெற்றதை தொடர்ந்து, சென்னை ஆயுதப்படை பெண் போலீசார் வேன் மூலம் சென்னைக்கு திரும்பி வந்தனர்.
சுமைதாங்கி அருகே வந்த போது முன்னாள் சென்ற லாரியின் மீது வேன் மோதி விபத்துக்குள்ளானது.
இதில் வேனில் பயணித்த 13 பெண் காவலர்களில், 7 பேருக்கு காயம் அடைந்தனர். அவர்களை சிகிச்சைக்காக வாலாஜாபேட்டை அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
மீதமுள்ள பெண் காவலர்கள் பாதுகாப்பாக காவேரிப்பாக்கம் காவல் நிலையத்திற்கு அழைத்து செல்லப்பட்டனர். சிகிச்சை பெற்று வந்த பெண் போலீசாரை ஆஸ்பத்திரிக்கு சென்று சந்தித்து எஸ்.பி.தீபா சத்யன் நலம் விசாரித்தார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்