என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "போலி கார்டு"
- ஓய்வு பெற்ற சப்-இன்ஸ்பெக்டரின் ஏ.டி.எம். கார்டை மாற்றினார்
- சித்தூர், கடப்பா போலீஸ் நிலையத்தில் 6 வழக்குகள் உள்ளது
அரக்கோணம்:
அரக்கோணம் அடுத்த ராமதாஸ் நகரை சேர்ந்தவர் விநாயகம். அரக்கோணம் டவுன் போலீஸ் நிலையத்தில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்ட ராக பணியாற்றி ஓய்வு பெற்றவர்.
இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு அரக்கோணம்- சோளிங்கர் ரோட்டில் உள்ள ஏ.டி.எம்.மையத்தில் பணம் எடுக்க சென்றார்.
அப்போது ஏ.டி.எம். மையத்தில் நின்றிருந்த வாலிபர் ஒருவர் தான் பணம் எடுத்து தருவதாக கூறி விநாயகத்தின் ஏ.டி.எம். கார்டை வாங்கி வைத்துக்கொண்டு, போலியான கார்டை அவரி டம் கொடுத்துவிட்டு அங்கிருந்து சென்று விட்டார்.
பின்னர் சப்-இன்ஸ்பெக்டரின் வங்கி கணக்கில் இருந்து ஒரு வாரத்தில் மட்டும் ரூ.1 லட்சத்து 58 ஆயிரம் எடுக்கப்பட்டுள்ளது.
இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் அரக்கோணம் டவுன் போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில் அரக்கோணம் உதவி போலீஸ் சூப்பிரண்டு யாதவ் க்ரிஷ் அசோக் தலைமையில் டவுன் இன்ஸ்பெக்டர் மற்றும் போலீசார் விசாரணை மேற் கொண்டு வந்தனர்.
இந்தநிலையில் நேற்று அரக்கோணம் ரெயில் நிலையம் அருகே சந்தேகம் அளிக்கும் வகையில் நின்றிருந்த வாலிபரை போலீசார் பிடித்து விசா ரணை மேற்கொண்டனர்.
விசாரணையில் அவர் ஆந்திர மாநிலம் நகரியை சேர்ந்த வெங்கடேசன் (வயது 20) என்பதும், சித்தூரில் உள்ள தனியார் கல்லூரியில் பி.டெக்.இரண்டாம் ஆண்டு படிப்பதும், ஏ.டி.எம். மையத் தில் பணம் எடுக்க வருபவரிடம் நைசாக பேசி அவர்களின் கார்டுகளை வாங்கிக் கொண்டு போலி கார்டுகளை கொடுத்து பணம் திருடி செல்வதும் தெரியவந்தது.
ஓய்வுபெற்ற சப்-இன்ஸ் பெக்டர் விநாயகத்திடமும் ஏமாற்றி பணம்திருடியதும் தெரிய வந்தது. அதைத்தொ டர்ந்து போலீசார் வெங்கடேசனை கைது செய்து, அவரிடம் இருந்து ரூ.1 லட்சத்து 58 ஆயிரத்தை பறிமுதல் செய்தனர்.
சித்தூர், கடப்பா போலீஸ் நிலையத்தில் இதே போன்று ஏ.டி.எம்.மில் பணம் திருடியதாக 6 வழக்குகள் இவர் மீது நிலுவையில் இருப்பதும் தெரியவந்தது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்