என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "போப் பிரான்சிஸ்"
- போப் பிரான்சிஸ் 6 நாள் பயணமாக கனடா சென்றுள்ளார்.
- போப் பிரான்சிஸ் பழங்குடியின மக்கள் மற்றும் முன்னாள் மாணவா்கள் மத்தியில் உரையாற்றினாா்.
ஒட்டாவா :
கனடாவில் 1900-ம் ஆண்டு முதல் 1970-ம் ஆண்டு வரையிலான காலக்கட்டத்தில் பழங்குடியினத்தை சேர்ந்த சிறுவர்கள் அவர்களின் குடும்பத்தினரிடம் இருந்து தனிமைப்படுத்தப்பட்டு, கத்தோலிக்க தேவாலயங்களால் நடத்தப்பட்ட பள்ளிகளில் தங்கி கல்வி பயில கட்டாயப்படுத்தப்பட்டனா்.
அப்படி தேவாலய பள்ளிகளில் படித்த பல்லாயிரக்கணக்கான பழங்குடியின மாணவர்கள் உடல் ரீதியிலும், பாலியல் ரீதியிலும் பல்வேறு துன்புறுத்தல்களுக்கு உள்ளாக்கப்பட்டனர். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கனடாவின் தற்போதைய அரசு இதை ஒப்புக்கொண்டு, அதற்காக மன்னிப்பும் கோரியது.
இந்த நிலையில், கத்தோலிக்க திருச்சபையின் தலைவரான போப் பிரான்சிஸ் 6 நாள் பயணமாக கனடா சென்றுள்ளார். தனது சுற்றுப்பயணத்தின் முதல் நிகழ்வாக அல்பெர்டா மாகாணத்தின் தலைநகர் எட்மான்டனில் 19-ம் நூற்றாண்டில் தேவாலய பள்ளிக்கூடமாக இருந்த மிகவும் பாழடைந்த கட்டிடத்துக்கு சென்று அங்கு கூடியிருந்த பழங்குடியின மக்கள் மற்றும் முன்னாள் மாணவா்கள் மத்தியில் உரையாற்றினாா்.
அப்போது 19-ம் நூற்றாண்டில் கத்தோலிக்க தேவாலயங்களால் நடத்தப்பட்ட பள்ளிக்கூடங்களில் பழங்குடியின மாணவர்கள் துன்புறுத்தல்களுக்கு உள்ளாக்கப்பட்டதற்காக போப் பிரான்சிஸ் மன்னிப்பு கோரினார்.
- வாடிகனின் நிர்வாகத் துறைகளில் பெண்களுக்கு முக்கிய பங்கு அளிக்கப்பட்டு வருகிறது.
- வாடிகனில் கடந்த மாதம் அமலுக்கு வந்த புதிய அரசியல் சாசனம் குறித்து விளக்கம் அளித்தார்.
வாடிகன் :
போப் பிரான்சிஸ், ராய்டர்ஸ் செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில், வாடிகன் நிர்வாகத்தில் பெண்களுக்கு முக்கிய பொறுப்புகளை அளிக்க திட்டமிடப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
பிஷப்களை தேர்வு செய்யும் குழுவில் தற்போது ஆண்கள் மட்டுமே இருப்பதாகக் குறிப்பிட்ட அவர், இக்குழுவில் பெண்களுக்கு வாய்ப்பளிக்க விரும்புவதாகத் தெரிவித்தார்.
விரைவில் இக்குழுவில் 2 பெண்கள் இடம் பெறுவார்கள் என்றும் இதன்மூலம் இந்த பாதையில் வழிகள் கொஞ்சம் திறக்கப்படுகின்றன என்றும் அவர் குறிப்பிட்டார். எனினும், இதற்கான முடிவு இன்னும் அதிகாரப்பூர்வமாக எடுக்கப்படவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
வாடிகனின் நிர்வாகத் துறைகளில் பெண்களுக்கு முக்கிய பங்கு அளிக்கப்பட்டு வருவதாகத் தெரிவித்த போப் பிரான்சிஸ், வாடிகனின் நீதி மற்றும் அமைதிக்கான துறையின் 2ம் நிலை தலைவராக சகோதரி அலீஸ்ஸாந்தரா ஸ்மெரில்லி கடந்த ஆண்டு தேர்வு செய்யப்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார். வாடிகனில் கடந்த மாதம் அமலுக்கு வந்த புதிய அரசியல் சாசனம் குறித்து விளக்கம் அளித்தார்.
- கத்தோலிக்க திருச்சபையின் தலைவரான போப் பிரான்சிசுக்கு 85 வயதாகிறது.
- போப் பிரான்சிஸ் ஒரு மாதத்துக்கும் மேலாக சக்கர நாற்காலியை பயன்படுத்தி வருகிறார்.
ரோம் :
கத்தோலிக்க திருச்சபையின் தலைவரான போப் பிரான்சிஸ் சமீபகாலமாக மூட்டு வலியால் அவதிப்பட்டு வருகிறார். மூட்டு தசைநார் வீக்கமடைந்த நிலையில் அவர் ஒரு மாதத்துக்கும் மேலாக சக்கர நாற்காலியை பயன்படுத்தி வருகிறார். இந்த நிலையில் 85 வயதாகும் போப் பிரான்சிஸ் வயது மூப்பு மற்றும் உடல்நிலை பிரச்சினைகள் காரணமாக எந்த நேரத்திலும் பதவி விலகலாம் என தகவல்கள் பரவி வருகின்றன.
குறிப்பாக கோடை காலத்தின் இறுதியில் அவர் பதவி விலகும் முடிவை அறிவிக்கலாம் என செய்திகள் வலம் வருகின்றன. இந்த நிலையில் போப் பிரான்சிஸ் இதனை திட்டவட்டமாக மறுத்துள்ளார். இது தொடர்பாக அவர் பிரபல பத்திரிகைக்கு அளித்த பேட்டியில், "கோடை இறுதியில் பதவி விலகலை அறிவிக்கும் எண்ணம் எனது மனதில் நுழையவே இல்லை" என்றார்.
மேலும் அவர் இந்த பேட்டியின்போது, இந்த மாதம் 24-ந்தேதி முதல் 30-ந்தேதி வரை கனடாவில் பயணம் மேற்கொள்ள இருப்பதாகவும், அந்த பயணத்தின்போது போர் நடந்து வரும் உக்ரைனுக்கு செல்வேன் என தான் நம்புவதாகவும் கூறினார்.
ஆஸ்திரேலியா, சிலி, ஜெர்மனி மற்றும் அமெரிக்கா போன்ற நாடுகளில் உள்ள கத்தோலிக்க பாதிரியார்கள் மீது தொடர்ச்சியாக பாலியல் குற்றச்சாட்டுகள் எழுந்தன. மேலும் உலக அளவில் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களில் ஈடுபடும் பாதிரியார்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருவது போப் ஆண்டவருக்கு பெரும் வருத்தத்தை ஏற்படுத்தியது.
எனவே பாதிரியார்களின் இத்தகைய பாலியல் குற்றங்களை விசாரிக்கும் வகையில் புதிய ஆணை ஒன்றை போப் பிரான்சிஸ் வெளியிட்டு உள்ளார். அதன்படி உலகம் முழுவதும் உள்ள கத்தோலிக்க மறைமாவட்டங்கள் ஒவ்வொன்றிலும், பாதிரியார்களின் பாலியல் குற்றங்களை விசாரிக்கும் வழிமுறை ஒன்றை அடுத்த ஆண்டு (2020) ஜூன் மாதத்துக்குள் உருவாக்க வேண்டும்.
மேலும் பாதிரியார்களின் பாலியல் சுரண்டல் குறித்து யாரும் அறிந்தாலோ அல்லது சந்தேகம் ஏற்பட்டாலோ உடனடியாக அவருக்கு உயர்ந்த பொறுப்பில் இருப்பவர்களிடம் புகார் செய்ய வேண்டும் எனவும் போப் பிரான்சிஸ் தனது ஆணையில் குறிப்பிட்டு உள்ளார். கடந்த கால கசப்பான அனுபவங்களில் இருந்து பாடம் கற்க வேண்டும் எனவும் அவர் அறிவுறுத்தி உள்ளார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்