search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "போட்டித் தேர்வுகளை"

    • போட்டித் தேர்வுகளை தன்னம்பிக்கையுடன் எதிர்கொள்ள வேண்டும் என்று இணை இயக்குநர் தெரிவித்துள்ளார்.
    • வெற்றி இலக்கை எளிதில் அடைவதற்கு

    அரியலூர்:

    என்றார் திருச்சி மண்டல வேலைவாய்ப்பு இணை இயக்குநர் மு.சந்திரன்.

    அரியலூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டல் மையத்தில், தன்னார்வ பயிலும் வட்டம் சார்பில் நடைபெற்ற போட்டித் தேர்வுக்கான (எஸ்.எஸ்.சி) இலவச பயிற்சியை திருச்சி மண்டல வேலைவாய்ப்பு இணை இயக்குநர் மு.சந்திரன் தொடக்கி வைத்து பேசினார். அப்போது அவர் கூறும் போது,

    போட்டித் தேர்வுக்கு நீங்கள் தயாராக செல்வதற்காக இந்த பயிற்சி வகுப்பு நடத்தப்படுகிறது. பல்வேறு நிலைகளில் உள்ள அரசு பணியிடங்களை நிரப்புவதற்காக போட்டித்தேர்வு நடத்தப்படுகிறது. கஷ்டப்பட்டு படித்தால் தான் போட்டித் தேர்வில் நீங்கள் வெற்றிப் பெற முடியும்.

    போட்டித் தேர்வில் பங்கு கொள்வது உங்கள் இலக்கு அல்ல, அதில் வெற்றி பெறுவது தான் உங்கள் இலக்காக இருக்க வேண்டும். போட்டித் தேர்வில் வெற்றி பெற்று நீங்கள் செய்யும் ஒவ்வொரு பணியும் சமுதாயத்திற்கானது. புத்தகத்தை கையில் வைத்து படிப்பது முக்கியம் இல்லை, படிப்பதை மனதிற்குள் எடுத்துக் கொள்வது தான் முக்கியம். தன்னம்பிக்கையுடன் போட்டித் தேர்வுகளை எதிர்கொண்டால வெற்றி என்ற இலக்கை எளிதில் அடையலாம் என்றார். பின்னர் டிஎன்பிஎஸ்சி, பிளஸ்-2 தேர்வில் வெற்றிப் பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கினார்.

    ×