search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "போக்சோ கைதி"

    • 18 வயதுக்குட்பட்ட சிறுமி ஒருவரை கேரளாவுக்கு கடத்திச் சென்று பாலியல் பலாத்காரம் செய்தார்.
    • புகாரின் பேரில் சிவக்குமார் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

    நாகர்கோவில் :

    பூதப்பாண்டி அருகே உள்ள வீரவநல்லூர் பகுதி யைச் சேர்ந்தவர் சிவக்குமார் (வயது 52). இவர் வடசேரி பஸ் நிலையத்தில் உள்ள டீக்கடையில் மாஸ்டராக பணியாற்றி வந்தார்.

    கடந்த சில மாதங்களுக்கு முன்பு இவர் 18 வயதுக்குட்பட்ட சிறுமி ஒருவரை கேரளாவுக்கு கடத்திச் சென்று பாலியல் பலாத்காரம் செய்தார். இது குறித்து சிவக்குமார் மீது நாகர்கோவில் மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். கைது செய்யப்பட்ட சிவக்குமார் பாளை ஜெயிலில் அடைக்கப்பட்டிருந்தார்.

    இந்த நிலையில் மருத்துவ பரிசோதனைக்காக அவரை பாளையங்கோட்டை ஜெய லில் இருந்து போலீஸ் பாதுகாப்புடன் நாகர்கோவில் ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து வந்தனர். மருத்துவ பரிசோத னைக்கு பிறகு பாளையங்கோட்டைக்கு அழைத்து செல்வதற்காக போலீசார் சிவகுமாரை வடசேரி பஸ் நிலையத்திற்கு கொண்டு வந்தனர்.

    அப்போது அவர் சிறுநீர் கழிக்க வேண்டும் என்று கூறி கழிவறைக்கு சென்றார். நீண்ட நேரம் ஆகியும் அவர் திரும்பி வரவில்லை. போலீ சார் அவரை தேடினார்கள். அப்போது சிவக்குமார் தப்பி ஓடி இருப்பது தெரிய வந்தது. இது குறித்து உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது பின்னர் போலீசார் பஸ் நிலையத்தை சுற்றியுள்ள பகுதிகளில் தேடுதல் வேட்டை யில் ஈடுபட்டனர். ஆனால் சிவக்குமார் கிடைக்கவில்லை. சிவக்குமாரை பிடிக்க 2 தனிப்படை அமைக்கப்பட்டது. இந்த தனிப்படை போலீசார், சிவக்குமாரை தீவிரமாக தேடி வருகின்றனர். இந்த நிலையில் தப்பி ஓடிய சிவகுமார் மீது போலீஸ் ஏட்டு பிரேம்குமார் வடசேரி போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் சிவக்குமார் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

    ×