search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "போகி கொண்டாட்டம்"

    • வாணியம்பாடி நகராட்சி சார்பில் வழங்கினர்
    • விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது

    வாணியம்பாடி:

    வாணியம்பாடி நகராட்சி சார்பில் புகையில்லா போகி பண்டிகை கொண்டாடுவது குறித்து பொதுமக்களுக்கு துண்டு பிரசுரம் மற்றும் உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி பஸ் நிலையத்தில் நடைபெற்றது.

    புகையில்லா போகி கொண்டாடுவது குறித்த விழிப்புணர்வு உறுதிமொழியை நகராட்சி ஆணையாளர் மாரி செல்வி தலைமையில் தூய்மை காவலர்கள் மற்றும் பொதுமக்கள் ஏற்றனர். பின்னர் பஸ் நிலையத்தி லிருந்து புகையில்லா போகி கொண்டாடுவது குறித்து துண்டு பிரசுரங்களை நகராட்சி தலைவர் உமா சிவாஜி கணேசன் வழங்கி தொடங்கி வைத்து பேசினார்.

    நிகழ்ச்சியில் நகராட்சி பொறியாளர் சம்பத், நகர கூட்டுறவு வங்கி தலைவர் வி.எஸ். சாரதி குமார் மற்றும் நகர மன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். தொடர்ந்து புகையில்லா போகி குறித்த விழிப்புணர் ஊர்வலம் நடைபெற்றது.

    பஸ் நிலையத்தில் இருந்து ஊர்வலமாக புறப்பட்டு முக்கிய வீதிகள் வழியாக சென்றது. அப்போது பொதுமக்களி டமிருந்து பழைய பொருட்களை தூய்மை காவலர்கள் சேகரித்தினர் .

    நிகழ்ச்சியில் தூய்மை பணியாளர்கள் பொது மக்கள் பலர் கலந்து கொண்டனர். இறுதியில் செந்தில்குமார் நன்றி கூறினார்.

    ×