என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "போகி கொண்டாட்டம்"
- வாணியம்பாடி நகராட்சி சார்பில் வழங்கினர்
- விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது
வாணியம்பாடி:
வாணியம்பாடி நகராட்சி சார்பில் புகையில்லா போகி பண்டிகை கொண்டாடுவது குறித்து பொதுமக்களுக்கு துண்டு பிரசுரம் மற்றும் உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி பஸ் நிலையத்தில் நடைபெற்றது.
புகையில்லா போகி கொண்டாடுவது குறித்த விழிப்புணர்வு உறுதிமொழியை நகராட்சி ஆணையாளர் மாரி செல்வி தலைமையில் தூய்மை காவலர்கள் மற்றும் பொதுமக்கள் ஏற்றனர். பின்னர் பஸ் நிலையத்தி லிருந்து புகையில்லா போகி கொண்டாடுவது குறித்து துண்டு பிரசுரங்களை நகராட்சி தலைவர் உமா சிவாஜி கணேசன் வழங்கி தொடங்கி வைத்து பேசினார்.
நிகழ்ச்சியில் நகராட்சி பொறியாளர் சம்பத், நகர கூட்டுறவு வங்கி தலைவர் வி.எஸ். சாரதி குமார் மற்றும் நகர மன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். தொடர்ந்து புகையில்லா போகி குறித்த விழிப்புணர் ஊர்வலம் நடைபெற்றது.
பஸ் நிலையத்தில் இருந்து ஊர்வலமாக புறப்பட்டு முக்கிய வீதிகள் வழியாக சென்றது. அப்போது பொதுமக்களி டமிருந்து பழைய பொருட்களை தூய்மை காவலர்கள் சேகரித்தினர் .
நிகழ்ச்சியில் தூய்மை பணியாளர்கள் பொது மக்கள் பலர் கலந்து கொண்டனர். இறுதியில் செந்தில்குமார் நன்றி கூறினார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்