search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பொறியியல் கலந்தாய்வு"

    • கலந்தாய்விற்கு மாணவர்கள் ஜூன் 20-ம் தேதி முதல் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.
    • ஆன்லைன் வாயிலாக விண்ணப்பிக்க ஜூலை 19ஆம் தேதி கடைசி நாள் ஆகும்.

    சென்னை:

    தமிழகத்தில் பொறியியல் படிப்புகளுக்கான கலந்தாய்வு ஆகஸ்டு 16-ஆம் தேதி தொடங்கும் என உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அறிவித்தார்.

    சென்னை தலைமைச் செயலகத்தில் அவர் கூறியதாவது:-

    இந்த ஆண்டு பொறியியல் கல்லூரிகளில் எந்த வகையில் மாணவர் சேர்க்கையை நடத்துவது என்பது குறித்து கலந்தாலோசித்து முடிவு செய்திருக்கிறோம்.

    குறிப்பாக பொறியியல் கல்லூரிகளில் அதிகமாக மாணவர்கள் சேராத சூழ்நிலை, குறிப்பிட்ட காலத்தில் இடம் கிடைக்காத சூழ்நிலை உள்பட பல்வேறு காரணங்களையும் ஆலோசித்தோம். சென்ற ஆண்டு அண்ணா பல்கலைக் கழகத் தில் மட்டும் 631 இடங்கள் காலியாக இருந்தன. அதற்கு முந்தைய வருடம் 750 இடங்கள் காலியாக இருந்தது. இதற்கு காரணம் அண்ணா பல்கலைக்கழகத்தில் சேர்ந்து விட்டு பின்னர் நீட் தேர்வு மூலம் மருத்துவ கல்லூரி உள்பட மற்ற கல்லூரிகளில் இடம் கிடைத்த காரணத்தால் அங்கு சென்று சேர்ந்து விடுவதுதான். அதனால் இங்கு காலி இடங்கள் ஏற்பட்டு விடுகிறது. எனவே இவற்றை மாற்றி அமைக்க வேண்டும் என்ற எண்ணத்தோடு இப்போது இந்த ஆண்டு நீட் தேர்வு முடிவு வந்த பிறகுதான் பொறியியல் கல்லூரி அட்மிஷன் தொடங்கப்படும்.

    பிளஸ்-2 தேர்வு முடிவு வந்த பிறகு ஆன்லைனில் விண்ணப்பம் சமர்ப்பிக்க இறுதி நாள் 19.7.2022. அதாவது ஜூன் 20-ல் தொடங்கி ஜூலை 19 வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். இந்த விண்ணப்பத்தை சொந்தமாகவும் விண்ணப் பிக்கலாம். அல்லது அவர வர் படிக்கும் பள்ளிகள் மூலமாகவும் விண்ணப் பிக்கலாம். இது தவிர தமிழகம் முழுவதும் மொத்தம் 110 இடங்களிலும் விண்ணப்பிக்க வசதிகள் ஏற்படுத்தப்படும்.

    விண்ணப்பங்கள் பெற்ற பிறகு சான்றிதழ் சரி பார்க்கப்படுவது 20.7.22 முதல் 31.7.22 வரை நடைபெறும். அதன் பிறகு தர வரிசை பட்டியல் 8.8.22 அன்று வெளியிடப்படும். ஆகஸ்டு 16 முதல் மாற்றுத் திறனாளிகள், முன்னாள் படை வீரர்கள், விளையாட்டு வீரர்களுக்கு இட ஒதுக்கீடு (கவுன்சிலிங்) நடைபெறும். அதன் பிறகு 22-ந்தேதியில் இருந்து பொது கல்வி, அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத இட ஒதுக்கீடு, 22.8.22 முதல் 14.10.22 வரை இட ஒதுக்கீடு நடைபெறும். இதில் துணை கலந்தாய்வு 15.10.22, 16.10.22 நடைபெறும். எஸ்.சி. கலந்தாய்வு 17, 18 ஆகிய 2 நாட்கள் நடைபெறும். 18-ந்தேதியுடன் அட்மிஷன் முடிந்து விடும். இதில் முதல் 15 ஆயிரம் பேருக்கு 1 வாரத்தில் கலந்தாய்வு நடைபெறும்.

    அந்த ஒரு வாரத்துக்குள் அவர்கள் பணம் கட்டியாக வேண்டும். அப்படி கட்டாவிட்டால் அவர்களது அட்மிஷன் ரத்து செய்யப்பட்டு அடுத்த மாணவருக்கு அந்த இட வாய்ப்பு வழங்கப்படும். தனியார் அல்லது அரசு பொறியியல் கல்லூரி என எந்த கல்லூரியாக இருந்தாலும் ஒரு வாரத்தில் பணம் கட்ட வேண்டும். 2 மாதத்தில் 4 ரவுண்டு கலந்தாய்வு முடிவு பெறும். பிளஸ்-2 தேர்வு முடிவு ஜூன் 23-ல் வெளி யிடப்படுவதால் அரசு கலைக் கல்லூரிகளில் சேர ஜூன் 27-ல் விண்ணப்பம் போடலாம். கடைசி தேதி ஜூலை 15 வரை விண்ணப்பிக்கலாம். ஜூலை 25-ந்தேதி முதல் மாணவர்கள் சேர்க்கப்படுவார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பொறியியல் கலந்தாய்வை நடத்தி முடிக்க அவகாசம் கோரிய மனு மீதான விசாரணையில் கூடுதல் ஆவணங்களை தாக்கல் செய்யுமாறு அண்ணா பல்கலைக்கழகத்திற்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு பிறப்பித்துள்ளது.
    புதுடெல்லி :

    பொறியியல் படிப்பிற்கான மாணவர்கள் சேர்க்கை கலந்தாய்வை இந்த மாத இறுதிக்குள் அண்ணா பல்கலைக்கழகம் நடத்தி முடிக்க வேண்டும் என்று அகில இந்திய தொழில்நுட்ப கல்விக்குழு உத்தரவு பிறப்பித்து இருந்தது. 

    ஆனால், மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வில் ஆங்கில வினாத்தாளை தமிழில் மொழிபெயர்த்ததில் ஏற்பட்ட பிழைகளுக்கு பொறுப்பேற்று சி.பி.எஸ்.இ. நிர்வாகம் தமிழில் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு 196 கூடுதல் மதிப்பெண்கள் வழங்க வேண்டும் என சென்னை ஐகோர்ட்டின் மதுரை கிளை உத்தரவிட்டது.

    இதனால் பொறியியல் கலந்தாய்வை நடத்தி முடிக்க ஆகஸ்டு 31-ந் தேதி வரை கூடுதல் அவகாசம் வழங்கக் கோரி அண்ணா பல்கலைக்கழகம் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் கடந்த வாரம் மனு தாக்கல் செய்யப்பட்டது.

    இந்த மனு நேற்று சுப்ரீம் கோர்ட்டில் நீதிபதிகள் எஸ்.ஏ.போப்டே, எல்.நாகேஸ்வரராவ் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.

    அப்போது, தமிழில் நீட் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு 196 கருணை மதிப்பெண்கள் வழங்க வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டின் மதுரை கிளை உத்தரவிட்டு உள்ளதால் 2-ம் கட்ட மருத்துவ கலந்தாய்வு நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது. 

    மேலும் மருத்துவ கல்லூரிகளில் இடம் கிடைக்காத மாணவர்கள் பொறியியல் கலந்தாய்வில் சேர்வார்கள். எனவே, கலந்தாய்வை நடத்த ஆகஸ்டு மாதம் 31-ந் தேதி வரை அனுமதிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டது.

    இதைத்தொடர்ந்து, இதுவரை நடந்த கலந்தாய்வில் எத்தனை மாணவர்கள் கலந்து கொண்டுள்ளனர் என்பன உள்ளிட்ட விவரங்கள் அடங்கிய கூடுதல் ஆவணங்களை 2 நாட்களுக்குள் தாக்கல் செய்யுமாறு அண்ணா பல்கலைக்கழகத்துக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர். அத்துடன் வழக்கு விசாரணையை வெள்ளிக்கிழமைக்கு ஒத்திவைத்தனர். 
    ×