என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » பொதுமக்கள் தர்மஅடி
நீங்கள் தேடியது "பொதுமக்கள் தர்மஅடி"
திண்டுக்கல் அருகே பெண்ணிடம் நகை பறிக்க முயன்ற வாலிபர்களுக்கு தர்மஅடி விதவிதமான நம்பர் பிளேட்டுகளுடன் சுற்றினர்
திண்டுக்கல்:
விஜயலட்சுமி சத்தம் போடவே அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் ஓடிவந்தனர். அவர்கள் வழிப்பறி கொள்ளையர்களை சரமாரியாக தாக்கினர். மேலும் நகையையும் அவர்களிடமிருந்து பறிமுதல் செய்தனர். இதுகுறித்து சின்னாளபட்டி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பிடிபட்ட கொள்ளையர்களை போலீஸ் நிலையத்திற்கு கொண்டு வந்தனர்.
மேலும் அவர்களிடமிருந்த மோட்டார் சைக்கிள் மற்றும் விதவிதமான நம்பர் பிளேட்டுகளையும் பறிமுதல் செய்தனர். பொதுமக்கள் தாக்கியதில் அவர்கள் படுகாயத்துடன் இருந்ததால் ஆம்புலன்ஸ் மூலம் திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
திண்டுக்கல் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தெலுங்கானா மற்றும் வடமாநிலத்தை சேர்ந்த கொள்ளையர்களின் கைவரிசை அதிகரித்த வண்ணம் உள்ளது. எனவே மாவட்டத்தில் தங்கியுள்ள வெளிமாநில தொழிலாளர்களை தீவிரமாக கண்காணித்து அவர்கள் என்ன வேலை பார்க்கிறார்கள் என்பதை பதிவு செய்து கொள்வதுடன் அவர்கள் எங்கு தங்கி உள்ளனர் என்பதையும் போலீசார் தீவிரமாக சோதனை நடத்தவேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X