search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பொதுமக்களுக்கு எச்சரிக்கை"

    • 2 காட்டு யானைகள் தமிழக வனப் பகுதிக்கு வந்துள்ளன.
    • மக்களுக்கு வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

    வேப்பனப்பள்ளி

    கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி அருகே உள்ள சிகரளபள்ளி சுற்றுவட்டார வன பகுதிகளில் கடந்த 3 மாதமாக மூன்று காட்டு யானைகள் முகாமிட்டிருந்தன.

    இந்த காட்டு யானைகளை சில நாட்களுக்கு கர்நாடக வனப்பகுதிக்கு தமிழக வனத்துறையினர் விரட்டி அடித்தனர். இந்த நிலையில் கர்நாடக வனப்பகுதியில் இருந்து 2 காட்டு யானைகள் தமிழக வனப் பகுதிக்கு வந்துள்ளன.

    சின்னதாமன்டரப்பள்ளி கிராம வனப்பகுதியில் 2 காட்டு யானைகள் முகாமிட்டுள்ளதால் வனப்பகுதியை ஒட்டியுள்ள சின்னதமன்றபள்ளி, திம்மசந்திரம், கொங்கனப்பள்ளி, பூதிமுட்லு, கே.கொத்தூர், தோட்டகணவாய், சிகரமாகனபள்ளி ஆகிய கிராம மக்களுக்கு வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

    மேலும் இரவு நேரங்களில் வனப்பகுதிக்கு வரவேண்டாம் எனவும் விளை நிலைகளில் தங்க வேண்டாம் என்றும் ஆடு, மாடு மேய்ப்பவர்கள் யாரும் வனப்பகுதி வர வேண்டாம் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

    மேலும் அந்த காட்டு யானைகளை தீவிரமாக கண்காணித்து வனப்பகுதிக்குள் விரட்டும் முயற்சியில் தமிழக வனத்துறை சார்பில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

    ×