search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பொதுச்செயலார்"

    • எடப்பாடி பழனிசாமி பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டார்.
    • அ.தி.மு.க.வினர் பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினர்.

    ராமநாதபுரம்

    சென்னை ஐகோர்ட்டு தீர்ப்பையடுத்து அ.தி.மு.க. பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி பொறுப்பேற்றார்.

    இதையொட்டி ராமநாதபுரம் மாவட்ட செய லாளர் எம்.ஏ. முனியசாமி வழிகாட்டு தலின்படி நகர் செயலாளர் என்.ஆர்.பால்பாண்டியன் தலைமையில் மாவட்ட அவைத்தலைவர் சாமி நாதன், ஒன்றிய செயலாளர் அசோக்குமார் ஆகியோர் முன்னிலையில் ராமநாத புரம் அரண்மனை, புதிய பஸ் நிலையம், கேணிக்கரை உள்பட பல பகுதிகளில் அ.தி.மு.க.வினர் பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினர்.

    இதில் அண்ணா தொழிற்சங்க மாநில துணைச்செயலாளர் ரத்தினம், எம்.ஜி.ஆர். மன்ற துணைச்செயலாளர் வீரபாண்டியன், எஸ்.எஸ்.செல்வம், எம்.ஜி.ஆர். இளைஞர் அணி செயலாளர் செல்வராஜ், நகர் நிர்வாகிகள் கமலக் கண்ணன், காளீஸ்வரன், சசிகுமார், மகளிர் அணி செயலாளர் ஜெய்லானி சீனிக்கட்டி.

    துணைச் செயலாளர் நாகஜோதி, நகர் செயலாளர் வாசுகி, பொருளாளர் மணிகண்டன், துணைச்செயலாளர் ஆரிபு ராஜா, டாஸ்மாக் தொழிற் சங்க நிர்வாகி ராபர்ட், அண்ணா தொழிற்சங்க நிர்வாகி சந்திரன், வன்னிய ராஜ், மாவட்ட பிரதிநிதி தனசேகரன், தகவல் தொழில்நுட்ப பிரிவு ராஜா, இணை செயலாளர் முத்துக் குமார் மற்றும் வார்டு செயலாளர்கள் சண்முகம், முருகன், அய்யனார், ராம கிருஷ்ணன், முத்து முருகன், செந்தில், பழனி, ராசு உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    ×