என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "பொது மருத்துவ முகாம்"
- இலவச பொது மருத்துவ முகாமை கலெக்டர் கிறிஸ்துராஜ் தொடங்கி வைத்தாா்.
- இம்முகாமில் மருத்துவா்கள் பரிசோதனை மேற்கொள்கின்றனா்.
திருப்பூர் :
தமிழ்நாடு அரசு ஊழியா்கள் சங்கம், மாவட்ட நிா்வாகம் சாா்பில் திருப்பூா் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற இலவச பொது மருத்துவ முகாமை கலெக்டர் கிறிஸ்துராஜ் தொடங்கி வைத்தாா்.
பின்னா் அவா் பேசியதாவது: அனைத்து தரப்பு மக்களின் நலனுக்காக பல்வேறு திட்டங்களை தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவித்து சிறப்பாக செயல்படுத்தி வருகிறாா். குறிப்பாக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறையின் சாா்பில் எண்ணற்ற திட்டங்கள் அறிவித்து அதனை சிறப்பாக செயல்படுத்தி வருகிறாா்.அதன்படி நடைபெறும் இம்முகாமில் மருத்துவா்கள் பரிசோதனை மேற்கொள்கின்றனா்.
இம்முகாமில், சா்க்கரை நோய், உயா் ரத்த அழுத்தம், இசிஜி பரிசோதனை, எக்கோ பரிசோதனை, ரத்த பரிசோதனை, சிறுநீா் பரிசோதனை, இதய நோய்கள் தொடா்பான பரிசோதனை, நுரையீரல், மகளிா் மருத்துவம், கண், பல், காது, மூக்கு- தொண்டை தொடா்பான பரிசோதனைகளும், மூட்டு மற்றும் எலும்பு சம்பந்தமான பரிசோதனை, காசநோய், மூளை நரம்பியல், வயிறு சமந்தப்பட்ட பரிசோதனை, மனநல மருத்துவம் போன்ற நோய்களுக்கான பரிசோதனை செய்யப்படுகிறது என்றாா்.
இம்முகாமில் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பணிபுரியும் ஊழியா்கள், பொதுமக்கள் என 500-க்கும் மேற்பட்டோா் கலந்து கொண்டு பரிசோதனைகள் மேற்கொண்டனா்.மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் லட்சுமணன், தமிழ்நாடு அரசு ஊழியா்கள் சங்க மாநிலத் தலைவா் எஸ். தமிழ்ச்செல்வி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
- கொடைக்கானலில் பிரதமர் நரேந்திர மோடியின் 72 வது பிறந்தநாள் விழா விமர்சையாக கொண்டாடப்பட்டது.
- பா.ஜனதா சார்பில் மூஞ்சிக்கல் பகுதியில் பொது மருத்துவ முகாம் நடத்தப்பட்டது.
கொடைக்கானல்:
கொடைக்கானலில் பிரதமர் நரேந்திர மோடியின் 72 வது பிறந்தநாள் விழா விமர்சையாக கொண்டாடப்பட்டது.
நகரத் தலைவர் சதீஷ்குமரன் தலைமையில் மாநில,மாவட்ட, நகர நிர்வாகிகள், இளைஞர் அணியினர் தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டு கவி தியாகராஜர் சாலை பகுதியில் பா.ஜனதா கொடியை ஏற்றி வைத்தனர்.
அதன் பின்னர் கொடைக்கானல் பெரிய மாரியம்மன் கோவிலில் மோடியின் பிறந்த நாளுக்காக சிறப்பு பூஜை செய்தனர்.
அதன்பின் பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினர்.மாவட்ட மருத்துவர் அணி தலைவர் டாக்டர் ஸ்ரீகலா தலைமையில் மூஞ்சிக்கல் பகுதியில் பொது மருத்துவ முகாம் அமைக்கப்பட்டது.
மருத்துவர் அணி மாவட்டச்செயலாளர் டாக்டர். விக்னேஸ்வரன் மற்றும் உதவியாளர்கள் சிகிச்சை அளித்தனர்.இந்நிகழ்வில் திரளான பொதுமக்கள் கலந்துகொண்டு சிகிச்சை பெற்றனர்.இதனிடையே குறிஞ்சி ஆண்டவர் கோவிலில் அன்னதானமும் பா.ஜனதா சார்பில் வழங்கப்பட்டது.
இதில் ஓ. பி. சி மாநிலச்செயலாளர் அண்ணாதுரை, மாநிலப் பொதுக்குழு உறுப்பினர் ஜெயராமன்,மாவட்டத் துணைத்தலைவர் டாக்டர். மதன்குமார்,முன்னாள் நகரத் தலைவர் மணி,நகரத் தலைவர் சதீஷ்குமரன்,நகர பொதுச்செயலாளர்கள் கணேசன், சரவணன், நகரப்பொருளாளர் ரமேஷ், இளைஞர் அணி நிர்வாகிகள் மற்றும் வார்டு நிர்வாகிகள், தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்