search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பொது மக்களுக்கும் இடையூறு"

    • ஆய்வு கூட்டம் நடந்தது
    • கழிவுகளை உடனுக்குடன் அகற்றும் விதமாக பணியாளர்களை பணியில் ஈடுபடுத்த வேண்டும்

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை அருணாச்சலேசுவரா கோவிலில் நடைபெறவிருக்கும் குரு பவுர்ணமியை முன்னிட்டு மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னேற்பாடு பணிகள் குறித்து மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் ஆய்வு கூட்டம் நடந்தது.

    கூட்டத்தில் கலெக்டர் முருகேஷ் தலைமை தாங்கி பேசியதாவது:-

    கிரிவலப்பாதையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி பக்தர்களுக்கு இடையூறு இல்லா வண்ணம் தூய்மையாக வைத்திருத்தல் வேண்டும்.

    கிரிவலம் வரும் பக்கதர்கள் மற்றும் பொது மக்களுக்கு அனைத்து அடிப்படை வசதிகள் ஏற்பாடு செய்து தர வேண்டும். அதே போல் அரசு போக்குவரத்து துறையின் மூலம் தற்காலிக பேருந்து நிலையம் அமைத்தல் வேண்டும்.

    போக்குவரத்து காவல் துறை மூலமாக போக்குவரத்தினை பக்தர்களுக்கும் பொது மக்களுக்கும் இடையூறு ஏற்படாத வண்ணம் சீர் செய்ய வேண்டும்.

    எவ்வித அசம்பாவிதமும் நடைபெறா வண்ணம் நகரின் முக்கிய இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொறுத்துதல் வேண்டும். நகராட்சி மற்றும் ஊராட்சி நிர்வாகத்தின் மூலமாக தூய்மை பணியாளர்களை கொண்டு 100 சதவீதம் கழிவறை தூய்மை படுத்தும் பணியில் ஈடுபடுத்தி குப்பைகள் மற்றும் கழிவுகளை உடனுக்குடன் அகற்றும் விதமாக பணியாளர்களை பணியில் ஈடுபடுத்த வேண்டும். மின்சாரத்துறையின் மூலமாக கோவிலில் உள்ள முக்கிய இடங்கள். கிரிவலப்பாதையில் பக்கதர்கள் செல்லும் இடங்களில் போதுமான அளவிற்கு மின்விளக்குகள் அமைக்கப்பட வேண்டும்.

    வட்டார போக்குவரத்து துறையின் மூலமாக நிர்ணயிக்கப்பட்ட கட்டண அடிப்படையில் பக்தர்கள் மற்றும் பொது மக்களிடம் ஆட்டோ கட்டணம் வசூலிக்கப்பட வேண்டும்.

    மருத்துவத்துறை மூலம் கிரிவலப்பாதையை சுற்றி மருத்துவ முகாம்கள் அமைத்தல், 108 அவரச கால ஊர்தியினை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்.

    இந்து சமய அறநிலையத்துறையின் மூலமாக தன்னார்வலர்கள், கோவில் பணியாளர்கள் ஆகியோர்கள் இணைந்து கோவிலில் சுவாமி தரிசனம் செய்ய வருகைத்தரும் பக்தர்களை முறைப்படுத்த வேண்டும் அதுமட்டுமில்லாமல் ராஜகோபுரம், அம்மணியம்மன் கோபுரம் ஆகிய இரு வழிகளில் வருகைத் தரும் பக்தர்களை வரிசைகளில் நிறுத்தி தாமதமின்றி தரிசனம் செய்ய உதவிட வேண்டும்.

    மேலும் விதிகள் மீறி சாலைகளில் தற்காலிகமாக வைக்கப்படும் கடைகளை அகற்றுதல். விளம்பர பேனர்கள் அகற்ற வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

    இந்த ஆய்வுக் கூட்டத்தில் போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன். இந்து சமய அறநிலையத்துறை மண்டல இணை ஆணையர். சுதர்சனம், உதவி கலெக்டர், ஆர்.மந்தாகினி மற்றும் அனைத்து துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    ×