search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பைக் மீது மரம் விழுந்த பலி"

    • நேற்று தந்தை இறந்தார்
    • போலீசார் விசாரணை

    குடியாத்தம்:

    வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த வீரிசெட்டிபல்லி ஊராட்சி வி.மத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் வெங்கடேசன் (வயது 48)இவர் குடியாத்தம் அடுத்த உப்பரப்பள்ளியில் உள்ள துணை மின் நிலையத்தில் லைன் மேலாக வேலை செய்து வந்தார்.

    கடந்த 4-ம் தேதி மதியம் வெங்கடேசன் தனது மகன் கோபிநாத் வயது 21 உடன் மோட்டார் சைக்கிளில் குடியாத்தத்தில் இருந்து தனது கிராமத்திற்கு சென்று கொண்டிருந்தார்.

    ராமாலை தண்ணீர் பந்தல் என்ற பகுதியில் சென்று கொண்டிருந்த போது பலத்த மழை பெய்து கொண்டிருந்தது. அப்போது சாலை ஓரம் இருந்த மரம் ஒன்று தந்தை மகன் சென்று கொண்டிருந்த மோட்டார் சைக்கிள் மீது திடீரென விழுந்தது. இதில் வெங்கடேசன் மற்றும் கோபிநாத் இருவரின் தலை மீது விழுந்து அப்படியே நசுக்கியது.

    அந்த வழியாக வந்த பொதுமக்கள் ஒன்று சேர்ந்து மரத்தை அப்புறப்படுத்தி படுகாயங்களுடன் ரத்த வெள்ளத்தில் கிடந்த மின்வாரிய ஊழியர் வெங்கடேசன் மற்றும் அவரது மகன் கோபிநாத் இருவரையும் மீட்டு சிகிச்சைக்காக குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    தொடர்ந்து மேல் சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

    தொடர்ந்து மேல்சிகி ச்சைக்காக சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனைக்கு தந்தை மகன் இருவரும் அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

    6-ந்தேதி காலையில் சிகிச்சை பலனின்றி மின்வாரிய ஊழியர் வெங்கடேசன் பரிதாபமாக பலியானார்.

    சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கோபிநாத்தும் நேற்று இரவு சிகிச்சை பலன் இன்றி பரிதாபமாக இறந்தார்.

    இந்த விபத்து தொடர்பாக பரதராமி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    விபத்தில் பலியான மின்வாரிய ஊழியர் வெங்கடேசனுக்கு அமுதா என்ற மனைவியும் இரண்டு மகன் ஒரு மகள் உள்ளனர் இதில் மூத்த மகன் கோபிநாத் தந்தையுடன் விபத்தில் சிக்கி இறந்த சம்பவம் அவர்கள் கிராமத்தை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

    ×