என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "பேருந்துகள் இயக்கம்"
- ஊர்களுக்கு செல்வதற்காக புதிய பேருந்து நிலையத்தில் குவிந்தனர்.
- தருமபுரி, கிருஷ்ணகிரிக்கு 65 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டது.
தருமபுரி,
ஆயுத பூஜை மற்றும் பள்ளி காலாண்டு விடுமுறையையொட்டி தருமபுரியிலிருந்து பொதுமக்கள் அவர்களது சொந்த மற்றும் வேலை செய்ய ஊர்களுக்கு செல்வதற்காக புதிய பேருந்து நிலையத்தில் குவிந்தனர்.
மேலும் நேற்று பவுர்ணமி என்பதால் திருவண்ணாமலைக்கு கிரிவலம் செல்வதற்காக அதிகப்படியான பயணிகள் குவிந்ததாலும் பயணிகள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது.
இதனால் தருமபுரி பேருந்து நிலையத்தில், பயணிகள் நெரிசல் அதிகரித்தது.
பயணிகள் பலர் குடும்பம் குடும்பமாக உடைமை களுடன் தங்களுக்கான பேருந்துகளில் இடம் பிடிக்க முயன்றதால், பேருந்து நிலைய வளாகம் முழுவதும் பரபரப்புடன், நெரிசலுடன் காணப்பட்டது.
இதையடுத்து சேலம் கோட்ட அரசுப் போக்கு வரத்துக் கழகம் சார்பில் முக்கிய நகரங்களுக்கு சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகிறது.
இது குறித்து அதிகாரிகள் கூறுகையில் சேலம் கோட்டத்தில் இருந்து தருமபுரி, கிருஷ்ணகிரிக்கு 65 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டது. பவுர்ணமியை ஒட்டி திருவண்ணாமலை கிரிவலம் செல்பவர்களுக்கும் விடுமுறை முடிந்து பணிக்கு செல்லும் பொது மக்களுக்கும் உடனுக்குடன் பேருந்துகள் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பயணிகள் காலதாமதம் இன்றி பயணம் செய்தனர் என தெரிவித்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்