search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பேச்சரங்கம்"

    • சேது பாஸ்கரா வேளாண்மை கல்லூரியில் பாரதி உலா பேச்சரங்கம் நடந்தது.
    • விழாவில் மாணவர்களின் கலைநிகழ்ச்சிகள இடம்பெற்றன.

    காரைக்குடி

    சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே உள்ள சேதுபாஸ்கரா வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி மையம் மற்றும் உரத்த சிந்தனை எழுத்தாளர் சங்கம் இணைந்து நடத்திய 9-ம் ஆண்டு பாரதி உலா நிகழ்ச்சி கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.

    கல்லூரி முதல்வர் கருணாநிதி தலைமை தாங்கினார். மாணவி பிரியதர்ஷினி வரவேற்றார். தாளாளர் சேது குமணன் முன்னிலை வகித்தார். இதில் "பாரதி பேச்சு, பாரதத்தின் மூச்சு" என்ற தலைப்பில் மாணவ-மாணவிகளின் பேச்சரங்கம் நடந்தது.

    திரைப்பட இயக்குனர் எஸ்.பி.முத்துராமன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிச ளித்து சிறப்புரையாற்றி னார். கல்லூரி இயக்குனர் கோபால், உரத்த சிந்தனை சங்க பொதுச்செயலாளர் உதயம்ராம் சிறப்புரை வழங்கினர்.

    விழாவில் மாணவர்க ளின் கலைநிகழ்ச்சிகள இடம்பெற்றன. மாணவர் விக்னேஷ் நன்றி கூறினார்.

    ×