search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பெண்ணிடம்"

    தாரமங்கலம் அருகே வீட்டில் தூங்கிய பெண்ணிடம் நகை பறிக்க முயற்சித்தார்.

    தாரமங்கலம்:

    தாரமங்கலம் அருகிலுள்ள நான்குரோடு , காரியபெருமாள் கோவில் அடிவாரம் பகுதியை சேர்ந்தவர் குமார். இவருடைய மனைவி செவத்தராஜ் (வயது 35) இவர் நேற்று இரவு தனது மகளுடன் வீட்டில் தூங்கி கொண்டிருந்தார். அப்போது நள்ளிரவு 1 மணியளவில் அங்கு வந்த மர்ம நபர்கள் தனது கழுத்தில் இருந்த கவரிங் செயினை பறிக்க முயன்றதை கண்டு கூச்சலிட்டார்.

    அப்போது வீட்டிற்கு வெளியே தூங்கி கொண்டிருந்த கணவர் குமார் வீட்டில் இருந்து வெளியே ஓடிவந்து மர்ம நபரை பிடிக்க முயன்றார், அப்போது அவர்கள் குமாரின் முகத்தில் கையால் குத்திவிட்டு தப்பி சென்றுவிட்டனர்.

    இந்தசம்பவம் பற்றி தாரமங்கலம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர் .மேலும் கண்ணில் பலத்த காயம் அடைந்த குமார் கோவை தனியார் கண் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் .

    ×