search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பெண் பிணம்"

    • ரங்கநாதன் என்ற தொழிலாளி மீன் பிடிப்பதற்காக வலையை குளத்தில் வீசினார்.
    • ஒரு பெண்ணின் உடல் வலையில் சிக்கி வெளியே வந்தது. இதனை பார்த்து அவர் அதிர்ச்சியடைந்தார்.

    கோவை:

    கோவை சுந்தராபுரம் அருகே உள்ள முருகன் நகரை சேர்ந்தவர் ராயப்பன் (வயது 38). இவர் ஆர்.எஸ்.புரம் தடாகம் ரோட்டில் உள்ள முத்தன்னங்குளத்தை மீன் பிடிப்பதற்காக குத்தகைக்கு எடுத்து உள்ளார்.

    சம்பவத்தன்று இவரிடம் வேலை பார்க்கும் மீன்பிடி தொழிலாளர்கள் குளத்தில் மீன் பிடிப்பதற்காக பரிசலில் சென்றனர். அப்போது ரங்கநாதன் என்ற தொழிலாளி மீன் பிடிப்பதற்காக வலையை குளத்தில் வீசினார். பின்னர் வலையை எடுத்தார். அப்போது ஒரு பெண்ணின் உடல் வலையில் சிக்கி வெளியே வந்தது. இதனை பார்த்து அவர் அதிர்ச்சியடைந்தார்.

    பின்னர் அவர் தனது உரிமையாளருக்கு தகவல் தெரிவித்தார். அவர் உடனடியாக இது குறித்து ஆர்.எஸ்.புரம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். உடனடியாக போலீசார் சம்பவஇடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில் பிணமாக மீட்கப்பட்ட பெண்ணுக்கு 55 வயது இருக்கும் என்பது தெரிய வந்தது. விசாரணை முடிந்ததும் போலீசார் பெண்ணின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இது குறித்து ஆர்.எஸ்.புரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து குளத்தில் பிணமாக மீட்கப்பட்ட பெண் யார்? அவர் எந்த ஊரைச் சேர்ந்தவர்? தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது தவறி விழுந்து இறந்தாரா? என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ×