search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பூலித்தேவன் சிலை"

    • இந்திய விடுதலை வரலாற்றில் வெள்ளையனே வெளியேறு என்று முதன் முதலில் முழங்கியவரும், வீர உணர்ச்சியும், இறை உணர்வு மிகுந்தவர் மாமன்னன் பூலித்தேவன்.
    • மாமன்னன் பூலித்தேவனின் 307-வது பிறந்தநாள் வருகிற 1-ந் தேதி கொண்டாடப்படுகிறது.

    சென்னை:

    மாமன்னன் பூலித்தேவனின் 307-வது பிறந்தநாள் வருகிற 1-ந் தேதி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்ப தாவது:-

    இந்திய விடுதலை வரலாற்றில் வெள்ளையனே வெளியேறு என்று முதன் முதலில் முழங்கியவரும், வீர உணர்ச்சியும், இறை உணர்வு மிகுந்தவர் மாமன்னன் பூலித்தேவன்.

    அவரது 307-வது பிறந்தநாளான 1-ந்தேதி (வியாழக்கிழமை) காலை 10.30 மணிக்கு தென்காசி மாவட்டம், வாசுதேவநல்லூர் நெற்கட்டும் செவல் என்ற இடத்தில் அமைந்து உள்ள பூலித்தேவன் சிலைக்கு அ.தி.மு.க. சார்பில் திண்டுக்கல் கிழக்கு மாவட்ட செயலாளர் நத்தம் விசுவநாதன், திண்டுக்கல் மேற்கு மாவட்ட செயலாளர் திண்டுக்கல் சீனிவாசன்.

    அமைப்பு செயலாளர் தளவாய் சுந்தரம், மதுரை மாநகர் மாவட்ட செயலாளர் செல்லூர் ராஜூ, மதுரை புறநகர் மேற்கு மாவட்ட செயலாளர் ஆர்.பி.உதயகுமார், மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட செயலாளர் ராஜன்செல்லப்பா, அமைப்பு செயலாளர்கள் கருப்பசாமி பாண்டியன், சுதா கே.பரமசிவன்.

    இசக்கி சுப்பையா, முருகையா பாண்டியன், ராஜேந்திரன், சீனிவாசன், கொள்கை பரப்பு துணை செயலாளர் பாப்புலர் முத்தையா, மகளிர் அணி துணை செயலாளர் வி.எம்.ராஜலட்சுமி, நெல்லை மாவட்ட செயலாளர் தச்சை கணேசராஜா, தென்காசி தெற்கு மாவட்ட செயலாளர் செல்வமோகன் தாஸ் பாண்டியன், தென்காசி வடக்கு மாவட்ட செயலாளர் கிருஷ்ணமுரளி ஆகியோர் மாலை அணிவிக்கிறார்கள்.

    மாமன்னன் பூலிதேவனுக்கு மரியாதை செலுத்தும் இந்த நிகழ்ச்சியில், தென்காசி வடக்கு, தென்காசி தெற்கு, திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் பல்வேறு நிலைகளில் பணியாற்றி வரும் நிர்வாகிகளும், கழக உடன் பிறப்புகளும் பெருந்திரளான அளவில் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன்.

    இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார்.

    ×