search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "புறகாவல் நிலையம்"

    • சப்-இன்ஸ்பெக்டர், 3 போலீசார் நியமனம்
    • கன்னியாகுமரியிலும் புற காவல் நிலையம் திறக்க வேண்டும்

    நாகர்கோவில், செப்.3-

    நாகர்கோவில் ரெயில் நிலையத்தில் ரெயில்வே போலீஸ் நிலையம் செயல் பட்டு வருகிறது.

    ரெயில்வே போலீசார்

    இங்கு ஒரு இன்ஸ்பெக் டர், 3 சப்-இன்ஸ்பெக் டர்கள் மற்றும் 25 போலீ சார் பணியில் உள்ளனர். நெல்லை மாவட்டம் மேலப்பாளையம் முதல் திருவ னந்தபுரம் பாறசாலை வரை யிலும் நாகர்கோவி லில் இருந்து கன்னியாகுமரி வரை உள்ள பகுதிகளிலும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.மேலும் ரெயில்களில் நடக்கும் குற்ற சம்பவங்களை கண்டுபிடிக்கவும் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்கள்.

    சமீபகாலமாக ெரயில் களில் குட்கா கஞ்சா கடத்தப்படுவதை தடுக்கும் வகையில் அதிரடி சோதனை நடத்தப்பட்டு வருகிறது.கடந்த ஒரு மாதத்தில் மட்டும் ரயிலில் கடத்தப்பட்ட சுமார் 25 கிலோ கஞ்சா பொருட்களை ரெயில்வே போலீசார் பறிமுதல் செய்து உள்ளனர்.

    இந்த நிலையில் குழித் துறை மற்றும் வள்ளியூர் பகுதிகளில் ஏற்படும் விபத்து களினால் உயிரிழப்புகள் ஏற்பட்டு ரெயில்கள் தாமத மாக செல்வதாக புகார்கள் வந்தது. இதற்கு முக்கிய காரணம் போலீசார் நாகர்கோவிலில் இருந்து சம்பவ இடத்திற்கு செல்ல நீண்ட நேரம் ஆவதால் தாமதம் ஏற்படுவதாக புகார்கள் இருந்து வந்தது.

    எனவே குழித்துறை மற்றும் வள்ளியூர் ரெயில் நிலையத்தில் புறகாவல் நிலைய அமைக்க நடவ டிக்கை எடுக்கப்பட் டது. நீண்ட நாட்கள் கோரிக்கையான குழித்துறை மற்றும் வள்ளியூரில் புறகாவல் நிலையம் திறக்கப்பட்டு உள்ளது. குழித்துறையில் ரெயில் நிலையத்திற்கு உள்ளே பிளாட்பாரத்தில் புறக்காவல் நிலையம் திறக்கப்பட்டு உள்ளது. அங்கு ஒரு சப்-இன்ஸ் பெக்டர் மற்றும் 3 போலீசார் பணியமர்த்தப்பட்டு உள்ள னர்.

    இதே போல் வள்ளியூரில் முதல் பிளாட்பாரத்தில் புறகாவல் நிலையம் திறந்து செயல்பட்டு வரு கிறது. இங்கு ஒரு சப்-இன்ஸ்பெக்டர் மற்றும் 4 போலீசார் முதல் கட்டமாக பணியமர்த்தப்பட்டு உள்ள னர். நேற்று முதல் புற காவல் நிலையம் செயல்பட தொடங்கியுள்ளது. வள்ளி யூர் மற்றும் குழித்துறையில் புறகாவல் நிலையம் திறக்கப்பட்டதையடுத்து அந்த பகுதியில் நடக்கும் குற்ற செயல்களை தடுக்க வும், ெரயில் விபத்துகளில் உயிரிழப்பு நடந்தால் சம்பவ இடத்திற்கு உடனடியாக சென்று அதை மீட்பு பணியை மேற்கொள்வதற்கும் தற்போது இந்த புற காவல் நிலையங்கள் உதவியாக இருக்கும் என்று தெரிகிறது.

    குழித்துறை, வள்ளியூரில் புற காவல் நிலையம் திறக்கப்பட்டதையடுத்து நாகர்கோவில் ரெயில் நிலையத்தில் பணிபுரிந்த போலீசாரே அங்கு நியமனம் செய்யப்பட்டுள்ளனர். ஏற்கனவே நாகர்கோவில் ரெயில் நிலையத்தில் குறைவான போலீசாரே பணியில் இருந்த நிலையில் புற காவல் நிலையத்திலும் இங்கு உள்ளவர்களே நியமிக்கப்பட்டுள்ளனர்.

    எனவே புற காவல் நிலையத்திற்கு புதிதாக போலீசாரை நியமனம் செய்து பணியமர்த்த வேண்டும் என்பது கோரிக்கையாக உள்ளது.மேலும் நாகர்கோவில் ரெயில்வே போலீசுக்கும் கூடுதல் போலீசாரை நியமனம் செய்ய வேண்டும்.

    சர்வதேச சுற்றுலா தலமான கன்னியாகுமரிக்கு வெளி மாவட்டங்களில் இருந்தும், வெளி மாநிலங்களில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கிறார்கள்.ஆனால் அங்கும் புறக்காவல் நிலை யம் இல்லை.

    எனவே கன்னியாகுமரியிலும் புற காவல் நிலையம் திறக்க வேண்டும் என்பது சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாக உள்ளது.

    ×