search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "புதிய அலுவலகம் திறப்பு"

    • ஓசூரில் வணிக வரித்துறை சார்பில் புதிதாக கட்டப்பட்டுள்ள வணிக வரிக் கோட்ட இணை ஆணையர், நுண்ணறிவு இணை ஆணையர் அலுவலகங்களை காணொளி காட்சி மூலம் முதல்-அமைச்சர் திறந்து வைத்தார்.
    • சேலம் வணிக வரிக் கோட்டத்திலிருந்து தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரி வருவாய் மாவட்டங்களை உள்ளடக்கிய புதிய ஓசூர் வணிக வரிக் கோட்டம் உருவாக்கப்பட்டு முதலமைச்சரால் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

    ஓசூர்,

    கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில், ஓசூர் - கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையையொட்டி உள்ள பெட்ரோல் நிலையம் அருகே வணிக வரித்துறை சார்பில், வணிக வரிக் கோட்ட இணை ஆணையர் (மாநில வரிகள்), மற்றும் நுண்ணறிவு இணை ஆணையர் .ஆகிய அலுவலகங்கள் புதிதாக அமைக்கப்பட்டுள்ளன,

    இதனை, நேற்று சென்னை தலைமைச் செயலகத்திலிருந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்தார்.

    தொடர்ந்து, ஓசூர் வணிகவரிக்கோட்ட அலுவலகத்தில், மாவட்ட கலெக்டர் கே.எம்.சரயு, ஓசூர் எம்.எல்.ஏ. ஒய்.பிரகாஷ், மாநகராட்சி மேயர் எஸ்.ஏ. சத்யா ஆகியோர் முன்னிலையில் குத்து விளக்கேற்றி வைத்து இனிப்பு வழங்கினார். பின்னர் அவர் கூறியதாவது: "தமிழ்நாடு முதலமைச்சரின் ஆணைக்கிணங்க, வணிக வரித்துறையில் தமிழக அளவில் 7 நிர்வாக கோட்டங்கள் மற்றும் 6 நுண்ணறிவு கோட்டங்கள் உருவாக்கப்பட்டு, அதன் ஒரு பகுதியாக தற்போது, சேலம் வணிக வரிக் கோட்டத்திலிருந்து தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரி வருவாய் மாவட்டங்களை உள்ளடக்கிய புதிய ஓசூர் வணிக வரிக் கோட்டம் உருவாக்கப்பட்டு முதலமைச்சரால் இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது. இந்த புதிய கோட்டத்தில், மாவட்டத்தில் உள்ள காவேரிப்பட்டிணம், பர்கூர், போச்சம்பள்ளி, ஓசூர், சூளகிரி, வேப்பனபள்ளி ஆகிய தாலுக்காக்களில் பதிவு பெற்ற வணிகர்கள் பயன் பெறுவார்கள். கிருஷ்ணகிரி வணிகவரி மாவட்டத்தில், கிருஷ்ணகிரி - 1, கிருஷ்ணகிரி-2, ஓசூர் தெற்கு-1, தெற்கு - 2, தெற்கு- 3 மற்றும் ஓசூர் வடக்கு - 1, வடக்கு - 2 ஆகிய 7 வணிக வரி சரகங்கள் செயல்படும்.ஓசூரில் உருவாகியுள்ள புதிய கோட்டத்தில் 2022 - 2023-ல், ரூ. 7 கோடியே 46 லட்சம் வருவாய் ஈட்டப்பட்டுள்ளது. இக்கோட்டத்தில் மொத்தம் 25,367 வணிகர்கள் பதிவு பெற்றுள்ளனர். பெருவாரியான வரி செலுத்தும் ஓசூர் மற்றும் கிருஷ்ணகிரி வணிகர்களின் நலனை கருத்தில்கொண்டு, இந்த புதிய கோட்டம் திறந்து வைக்கப்பட்டுள்ளது".

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதில், ஓசூர் மாநகராட்சி ஆணையாளர் சினேகா, சப்-கலெக்டர் சரண்யா, வணிகவரித்துறை இணை ஆணையர்கள் நாராயணன் (நிர்வாகம்), ஜெயராமன் (நுண்ணறிவு), துணை ஆணையர்கள் ஹேமா (கிருஷ்ணகிரி), சங்கரமூர்த்தி மற்றும் உதவி ஆணையர்கள், அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • ஒ.ஜோதி எம்.எல்.ஏ. திறந்து வைத்தார்
    • ஏராளமானோர் கலந்து கொண்டனர்

    செய்யாறு:

    செய்யாறில் புதியதாக மாவட்ட தொடக்க கல்வி அலுவலகம் நேற்று தொடங்கப்பட்டது.

    செய்யாறு, அனக்காவூர், வெம்பாக்கம், ஆரணி, மேற்கு ஆரணி, வந்தவாசி, தெள்ளார், பெரணமல்லூர், சேத்துப்பட்டு உள்ளிட்ட ஒன்பது யூனியன் பகுதிகளில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளி 64 உள்பட தொடக்கப்பள்ளி மற்றும் நடுநிலைப் பள்ளி என 850 பள்ளிகள் இந்த அலுவலகத்தின் கட்டுப்பாட்டில் செயல்படும்.

    செய்யாறு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நேற்று புதிதாக தொடங்கப்பட்ட மாவட்ட தொடக்க கல்வி அலுவலகத்தை ஒ. ஜோதி எம்எல்ஏ திறந்து வைத்தார்.மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் நளினி தலைமை தாங்கினார்.

    மாவட்ட ஊராட்சி குழு தலைவர் பார்வதி சீனிவாசன், ஆர்டிஓ ஆர். மந்தாகினி ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஒன்றிய குழு தலைவர்கள் என். பாபு, டி.ராஜு, திலகவதி ராஜ்குமார், திமுக நகர செயலாளர் கே. விஸ்வநாதன், ஒன்றிய செயலாளர்கள் என். சங்கர், ஞானவேல், பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் வழக்கறிஞர் ஜி அசோக், வழக்கறிஞர் பாட்ஷா, நகர மன்ற உறுப்பினர் ரமேஷ், உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    ×