என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "பாலியல் தொலை"
- 7 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த 70 வயது தாத்தா மீது வழக்கு பதியபட்டுள்ளது
- பெற்றோர் இது–குறித்து ஜீயபுரம் அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தனர்.
திருச்சி:
திருச்சி மாவட்டம் ஜீய–புரம் அருகேயுள்ள புத்த–னாம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் 7 வயது சிறுமி. பெற்றோர் கூலி வேலை பார்த்து பிழைப்பு நடத்தி வருகிறார்கள். அதே பகுதியி–ல் உள்ள தனியார் பள்ளியில் இரண்டாம் வகுப்பு படித்து வரும் சிறுமி தினமும் பள்ளிக்கு சென்றுவிட்டு, பெற்றோர் வரும் வரை பக்கத்து தெருவில் வசிக்கும் தனது பாட்டி வீட்டுக்கு செல்வதை வழக்கமாக கொண்டிருந்தார்.இதற்கிடையே அங்கு சிறுமியின் தாத்தாவான வெள்ளையன் (வயது 70), பேத்தி என்றும் பாராமல் அவருக்கு பல்வேறு வகைக–ளில் பாலியல் தொல்லை அளித்து வந்துள்ளார். இதில் உடல் நலம் குன்றிய அவரை பெற்றோர் ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர்.
அப்போதுதான் மகள் பாலியல் தொல்லைக்கு ஆளாக்கப்பட்டது தெரிய–வந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் இது–குறித்து ஜீயபுரம் அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தனர்.அதன்பேரில் போலீசார் சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த வெள்ளை–யன் மீது போக்சோ சட்டத்தின்கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். பாதுகாப்பு அரணாக இருக்க வேண்டிய தாத்தாவே இதுபோன்ற இழிசெயலில் ஈடுபட்டது அப்பகுதி மக்களிடையே பெரும் வேதனையை ஏற்ப–டுத்தி இருக்கிறது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்