என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "பாரத மாதா"
- கன்னியாகுமரி சன்னதி தெருவில் அமைந்துள்ள பகவதி அம்மன் கோவில் முன்பு இன்று காலை திரண்டனர்.
- மாலை அணிவிக்க அனுமதிக்காததை கண்டித்து உண்ணாவிரத போராட்டம் நடத்தினர்
கன்னியாகுமரி :
விசுவ இந்து பரிசத்தின் 60-வது ஆண்டு தொடக்க விழாவையொட்டி கன்னியாகுமரி சன்னதி தெருவில் அமைந்துள்ள பகவதி அம்மன் கோவில் முன்பு பாரத மாதாவின் உருவப்படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தும் நிகழ்ச்சியை இன்று நடத்தப்போவதாக விசுவ இந்து பரிசத் அமைப்பினர் அறிவித்து இருந்தனர். ஆனால் இதற்கு போலீசார் அனுமதி அளிக்கவில்லை.
இதைத்தொடர்ந்து தடையை மீறி பாரத மாதா உருவப்படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துவதற்காக பஜ்ரங்தள் மாநில அமைப்பாளர் பீமாராவ் தலைமையில் மாநில விசுவ இந்து பரிசத் அமைப்பாளர் சேதுராமன், குமரி மாவட்ட தலைவர் குமரேசதாஸ், மாநில பொருளாளர் பாலு, மாநில இணை செயலாளர் காளியப்பன், மாவட்ட சேவா பிரம்முக் செந்தில், நாகர்கோவில் மாநகர தலைவர் நாஞ்சில் ராஜா, செயலாளர் மகேந்திரன், மாவட்ட இணை செயலாளர் ஜெகன் உள்பட ஏராளமான விஷ்வ இந்து பரிஷத் அமைப்பினர் கன்னியாகுமரி சன்னதி தெருவில் அமைந்துள்ள பகவதி அம்மன் கோவில் முன்பு இன்று காலை திரண்டனர்.
இந்த நிகழ்ச்சியின் தொடக்கமாக அவர்கள் கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தனர். பின்னர் அவர்கள் அங்கு இருந்து வெளியே வந்து கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் கலையரங்கம் முன்பு மாலை அணிவித்து அலங்கரித்து வைக்கப்பட்டு இருந்த பாரத மாதாவின் உருவப்படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துவதற்காக வந்தனர். அவர்களை போலீசார் இதற்கு அனுமதி இல்லை என்று கூறி தடுத்தனர். இதனால் போலீசாருக்கும், விசுவ இந்து பரிசத் அமைப்பினருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
விஷ்வ இந்து பரிஷத் அமைப்பை சேர்ந்த 14 பேரை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர்களை ஒரு வேனில் ஏற்றி மாதவபுரத்தில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர். அங்கு தங்கி இருந்த விசுவ இந்து பரிசத் அமைப்பை சேர்ந்தவர்கள் பாரத மாதா உருவப்படத்துக்கு மாலை அணிவிக்க அனுமதிக்காததை கண்டித்து உண்ணாவிரத போராட்டம் நடத்தினர். இதனால் அங்கு மேலும் பரபரப்பும் பதட்டமும் நிலவியது.
- கன்னியாகுமரி முக்கடல் சங்கமத்தில் நடந்தது
- கோவில் கும்பாபிஷேகம் வருகிற மே மாதம் 5-ந்தேதி நடக்கிறது.
கன்னியாகுமரி :
சென்னைஅருகே உள்ள நீலமங்கலம் சாஸ்திரா லயத்தில் 48 அடி உயரமும் 300 டன் எடையும் உள்ள கற்களைக்கொண்டு பாரத மாதா கோவில் அமைக்கப் பட்டு வருகிறது.
இந்தகோவிலை சுவாமி பிரம்ம யோகானந்தா தலைமையிலும் அவரது சீடர்களின் முயற்சியிலும் ஒரு தவமாகவே மேற்கொண்டு இந்த கோவில் கட்டும் திருப்பணி நிறைவேறிக்கொண்டு இருக்கிறது. இந்த கோவில் கட்டும் பணி கடந்த 2022-ம் ஆண்டு தொடங்கியது.இந்த கோவில் கும்பாபிஷேகம் வருகிற மே மாதம் 5-ந்தேதி நடக்கிறது.
இந்த கும்பாபிஷேக நிகழ்ச்சியில் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் அகிலபாரத தலைவர் மோகன்பகவத் கலந்து கொள்கிறார். இதைத் தொடர்ந்து இந்த கோவிலின் கோபுர கலச பூஜை கன்னியாகுமரி முக்கடல் சங்கமத் தில் நேற்று நடந்தது. பின்னர் விவேகானந்தா கேந்திராவில் உள்ள ராமாயண அரங்கத்தில் கோபுர கலசத்துக்கு பூஜை மற்றும் சுவாமி பிரம்ம யோகானந்தாவின் சத்சங்கம் நிகழ்ச்சியும் நடந்தது.
நிகழ்ச்சியின் முடிவில் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் குமரி மாவட்ட பா.ஜ.க. தலைவர் தர்மராஜன், அகஸ்தீஸ்வரம் ஒருங்கிணைந்த ஒன்றிய பார்வையாளர் சி.எஸ்.சுபாஷ், நாகர்கோவில் மாநகராட்சி கவுன்சிலர் அய்யப்பன், மாவட்ட துணைத்தலைவர் முத்துராமன் உள்பட பலர் கலந்து கொண்டனர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்