search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பாத்திரங்கள்"

    • தனியாருக்கு சொந்தமான காலிமனையில் 50 டன் தேங்காய் மட்டைகள் குவியலாக சேமித்து வைக்கப்படிருந்தது.
    • தேங்காய் சிரட்டைகள், உடைந்த பாத்திரங்கள் ஆகியவை கொசுப்புழு உற்பத்தியாகாத வண்ணம் அகற்றப்பட்டது.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாநகராட்சிக்கு ட்பட்ட கல்லுக்குளம் அருளானந்த நகர் 3-வது தெரு பகுதியில் மாநகராட்சி ஆணையர் சரவணகுமார் அறிவுறுத்தலின்படி டெங்கு தடுப்புகள் பணிகள் நடைபெற்றது. மாநகர் நல அலுவலர் டாக்டர் சுபாஷ் காந்தி தலைமையிலான குழுவினர் டெங்கு தடுப்பு பணிகளை மேற்கொண்டனர்.

    இந்த களபணியின் போது அருளானந்த நகர் 3-வது தெருவில் தனியாருக்கு சொந்தமான காலிமனையில் 50டன் தேங்காய் மட்டைகள் குவியலாக சேமித்து வைக்கப்படிருந்தது.

    டெங்கு பரப்பும் ஏடிஸ் கொசு உற்பத்தியாவதற்கு வாய்ப்பாக இந்த தேங்காய் மட்டைகள் இருக்கும் என்பதால் தனியார் காலி மனையின் உரிமையாளருக்கு பொது சுகாதார சட்டத்தின் படி நோட்டீசு வழங்கப்பட்டு பொக்லைன் எந்திரங்கள் கொண்டு 5 லாரிகள் மூலமாக தேங்காய் மட்டைகள் அப்புறப்படுத்தப்பட்டன.

    மேலும் அந்த பகுதியில் அமைந்துள்ள தனியார் செவிலியர் கல்லூரி, விடுதிகள் மற்றும் தனியார் தொடக்கப்பள்ளியில் டெங்கு தடுப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டது.

    ஏடிஸ் கொசு பரவலை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக கூட்டு துப்புரவு பணி மேற்கொண்டு பிளாஸ்டிக் கப்கள், தேங்காய் சிரட்டைகள், டயர்கள், உடைந்த பாத்திரங்கள் ஆகியவை கொசுப்புழு உற்பத்தியாகாத வண்ணம் அகற்றப்பட்டது.

    வீடுகள், காலிமனைகள் ஆகியவற்றில் டெங்கு கொசு உற்பத்தியாகும் கலன்கள் கண்டறியப்பட்டால், உரிமையாளருக்கு அபராதம் விதிக்கப்படும் என மாநகராட்சி சார்பில் அறிவுறுத்தப்பட்டது.

    இந்த முகாமுக்கான ஏற்பாடு களை துப்புரவு ஆய்வாளர் ஜோசப் சேவியர், நகர்ப்புற ஆரம்ப சுகாதார செவிலியர் உமா ஆகியோர் செய்திருந்தனர்.

    ×