search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பாதுகாப்புத்துறை"

    • கலெக்டர் ஸ்ரீதர் தொடங்கி வைத்தார்
    • தற்போது இவ்வாகனத்தில் உணவு பரிசோதனையானது முற்றிலும் இலவசமாக செய்யப்படுகிறது.

    நாகர்கோவில் :

    கன்னியாகுமரி மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை யின் சார்பில் நடமாடும் உணவு பகுப்பாய்வு வாகனத்தை கலெக்டர் அலுவலகம் முன்பு கலெக்டர் ஸ்ரீதர் கொடி யசைத்து தொடங்கி வைத்தார். பின்னர் அவர் கூறியதா வது:-

    தமிழ்நாடு அரசின் ஆணைக்கிணங்க நடமாடும் உணவு பகுப்பாய்வு கூடம் எனப்படும் "புட் சேப்டி ஆன் வீல்ஸ்" வாகனம் எப்.எஸ்.எஸ்.ஏ.ஆல். சி.எஸ்.எஸ். திட்டத்தில் வழங்கப் பட்டுள்ளது. தமிழகத்தில் சென்னை மற்றும் மதுரை உணவு பகுப்பாய்வுக் கூடங்களின் கட்டுப்பாட்டில் தலா ஒரு வாகனம் இயங்கி வருகிறது.

    மதுரையினை மையமாக கொண்டு இயங்கிவரும் இவ்வாகனமானது பொது மக்கள், வியாபாரிகள், பள்ளி, கல்லூரி மாணவர்கள் மத்தியில் உணவு கலப்படம் மற்றும் உணவு பகுப்பாய்வு குறித்தான விழிப்பு ணர்வினை ஏற்படுத்தி வருகிறது. இவ்வா கனத்தில் மேற்கொள்ளப்படும் பரிசோதனையானது அவர்க ளிடையே நல்ல சுகாதாரமான சத்தான உணவை உட்கொள்ள ஒரு தூண்டு கோலாக அமைகிறது.

    ஏற்கனவே இவ்வாகன மானது மதுரை, விருதுநகர், நெல்லை மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் சுற்றுப் பயணத்தை முடித்துவிட்டு தற்போது கன்னியாகுமரி வந்துள்ளது. இவ்வாக னமானது கன்னியாகுமரி மற்றும் தென்காசி முதலான தென்மாவட்டங்களில் தொடர்ந்து விழிப்புணர்வு சுற்றுப்பயணம் மேற்கொள்ள வுள்ளது.

    பொதுமக்கள், வியாபா ரிகள், பள்ளி, கல்லூரி மாணவர்கள் மூலம் பரிசோ தனைக்காக பெறப்படும் உணவு பொருட்கள் இவ்வாய் வகத்தில் மேற்கொள்ளப் படும், எளிய பரிசோதனை மூலம் அப்பொருளின் தரம் கண்டுபிடிக்கப்படுகிறது. தரமற்ற பொருளாக இருப் பின் மாவட்ட நியமன அலுவலர் மற்றும் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் மூலம் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். மேலும் புகார்களை 94440 42322 என்ற வாட்ஸ்அப் எண் மூலமாகவும் தெரிவிக்கலாம். மேலும் இவ்வா கனத்துடன் இணையும் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் சுகாதாரமான உணவு தயாரிப்பு மற்றும் கடைகளில் வாங்கும் பொருட்களில் லேபிளில் உள்ள தயாரிப்பு தேதி, காலாவதி தேதி மற்றும் பிற விபரங்களினை பொது மக்கள், வியாபாரிகள் மற்றும் மாணவர்களுக்கு விளக்கு வார்கள். உணவில் கலப்படம் குறித்து கண்டுபிடிக்கும் எளிய பரிசோதனைகளை இவ்வாய்வகத்திலிருந்து வரும் பகுப்பாய்வாளர். மாணவ-மாணவிகள் மற்றும் பொதுமக்களுக்கு செய்து காட்டுவர். விழிப்புணர்வு காணொளிகள் ஒளி பரப்பாகும். வியாபாரிகளுக்கு தேவையான விளக்கங்கள் வழங்கப்படும். பாதுகாப்பான உணவு, "ஜங்க் புட்" தவிர்த்தல், இயற்கை உணவினை பயன்படுத்துதல் சம்பந்தமாக பள்ளி, கல்லூரிகளில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளுக்கு அந்தந்த மாவட்டங்களில் வாகனம் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும்போது அனுமதியினை மாவட்ட நியமன அலுவலரை தொடர்பு கொண்டு பெற்றுக் கொள்ளலாம். தற்போது இவ்வாகனத்தில் உணவு பரிசோதனையானது முற்றிலும் இலவசமாக செய்யப்படுகிறது.

    ஆகவே, இவ்வாய்ப்பினை பொதுமக்கள், வியாபாரிகள், பள்ளி, கல்லூரி மாணவர்கள் பயன்படுத்தி கொள்ளலாம் என்றார்.

    இந்த நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் பாலசுப்பிரமணியம், மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலர் டாக்டர் செந்தில்குமார், நாகர்கோவில் வருவாய் கோட்டாட்சியர் சேதுராம லிங்கம், துணை இயக்குநர் (சுகாதாரப்பணிகள்) மீனாட்சி, துறை அலுவலர்கள், தனியார் உணவக உரிமை யாளர்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

    ×