search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பஸ் மோதி பூ வியாபாரி பலி"

    • பைக்கில் சென்றபோது தடுமாறி விழுந்ததில் அவ்வழியே வந்த அரசு பஸ் இவர்கள் மீது ஏறி இறங்கியது.
    • இதில் பூ வியாபாரி பரிதாபமாக உயிரிழந்தார்.

    நிலக்கோட்டை:

    திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகில் உள்ள எத்திலோடு ஊராட்சி, காமாட்சி புரத்தை சேர்ந்தவர் திருக்கோவில் (வயது34). அதே ஊரைச் சேர்ந்தவர் பழனிமுத்து (34). பூ வியாபாரிகளான இவர்கள் நிலக்கோட்டை பூ மார்க்கெட்டில் பூக்களை வாங்கிக்கொண்டு கொடை க்கானலில் விற்பனை செய்து வந்தனர்.

    நேற்று மோட்டார் சைக்கிளில் மணியகார ன்பட்டி அருகே இருவரும் சென்று கொண்டிருந்த போது பைக் எதிர்பாராத விதமாக நிலைதடுமாறியது. அப்போது அவ்வழியே வந்த அரசு பஸ் இவர்கள் மீது ஏறி இறங்கியது. இதில் திரு க்கோ வில் சம்பவ இட த்தில் உயிரி ழந்தார்.

    பழனி முத்து வுக்கு 2 கால்களும் துண்டான நிலையில் நிலக்கோட்டை அரசு ஆஸ்ப த்திரிக்கு அனுப்பி வைக்க ப்ப ட்டார். இது குறித்து நிலக்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசா ரித்து வருகின்றனர்.

    ×