search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பழனிநாடார் எம்.எல்.ஏ."

    • நோன்பு திறப்பு நிகழ்ச்சியை அஹ்மது ஷா தொடங்கி வைத்தார்.
    • நகராட்சி சேர்மன் வள்ளி முருகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    சுரண்டை:

    சுரண்டை முகைதீன் ஜும்மா பள்ளிவாசலில் சமூக நல்லிணக்க இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சியை பேஸ் இமாம் அஹ்மது ஷா 'கிராத்' ஓதி தொடங்கி வைத்தார். சிறப்பு அழைப்பாளர்களாக பழனிநாடார் எம்.எல்.ஏ., சுரண்டை நகராட்சி சேர்மன் வள்ளி முருகன் ஆகியோர் பங்கேற்றனர். பள்ளிவாசல் செயலாளர் கமாலுதீன் வரவேற்று பேசினார். பள்ளிவாசல் துணை செயலாளர் சாகுல் ஹமீது பாதுஷா நோன்பின் மாண்பு பற்றி பேசி னார். பழனி நாடார் எம்.எல்.ஏ. சிறப்புரையாற்றினார்.

    நகராட்சி சேர்மன் வள்ளி முருகன் நகராட்சி துணைத் தலைவர் சங்கராதேவி முருகேசன், சுரண்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் செல்லப்பா ஆகியோர் உரையாற்றி னார். சுரண்டை எஸ்.டி.பி.ஐ. கட்சியை சேர்ந்த தலைவர், செயலாளர், மாவட்ட செயலாளர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    சுரண்டை முகைதீன் ஜும்மா பள்ளிவாசல் தலைவர் சாகுல் ஹமீது இப்தார் விழாவில் கலந்து கொண்ட அனைத்து சமுதாய தலைவர்கள், அதிகாரிகள், எம்.எல்.ஏ., உள்ளாட்சி பிரதிநிதிகள், ரவி பிரஸ் உரிமையாளர் தனபால் ஆகியோர் சுரண்டை முகைதீன் பள்ளி வாசல் பொறுப்பாளர்களால் கவுரவிக்கப் பட்டார்கள்.

    ×